districts

வெள்ளப்பாதிப்பை தடுக்க ‘மினி குளம்’ மாநகராட்சி திட்டம்

சென்னை,டிச.14-  தெருக்களில் மழை வெள்ளநீர் தேங்காமல் இருக்க ‘மினி’ குளத்தை அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. மழையின் காரணமாக சென்னை  தெருக்களில் வெள்ளம் தேங்கா மல் இருக்க 10 அடி ஆழத்தில் சிறிய அளவில் குளம் அமைக்கப் பட உள்ளது. இதில்நீர் ஊறவைக்கும் மரக்கன்றுகள் நடவும், மழைநீர் வடிகால்வாய் இணைக்கவும் உள்ளன. மேலும் சாலை மேற்பரப்பு ஓடையும் இதில் இணைக்கப்படுகிறது. இந்த குளங்களைச் சுற்றி தோட்டங்கள், தேவையான விளக்குகள், பெஞ்சு  இருக்கைகள் ஆகியவை செய்யப் படுகின்றன. இவை 47 இடங்களில் கடற்பாசி பூங்கா போல் அமைக்கப்பட இருக்கிறது.முதற்கட்டமாக 5 இடங்களில் இந்த பூங்கா அமைக்க ரூ. 92 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது.  சென்னை பெரம்பூரில் உள்ள முரசொலிமாறன் பூங்கா தெற்கு பகுதியில் ரூ. 18 லட்சம் செலவில் இந்த  குளம் அமைக்கப்படுகிறது. வி.ஜி.பி  செல்வா நகர் 2-வது பிரதான சாலையில் ரூ.12 லட்சம் செலவிலும் கங்கை தெருவில் ரூ.8 லட்சம் செலவி லும் இந்த பூங்கா அமைக்கப்பட உள்ளன. சென்னை மாநகர தெருக்க ளில் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் மழைத்தண்ணீர் இந்த பூங்காவில் எளிதில் சேமிக்கப்பட உள்ளது. இதன் மூலம் நிலத்தடி நீர் மட்டம் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.