சீர்காழி, பிப்.8 - மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே புதுப் பட்டினம் ஆரம்ப சுகாதார நிலையம் அருகில் சாலை யோரம் குப்பைகள் கொட்டப் படுவதால் பொதுமக்கள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள னர். புளியந்துறை கிராமத்தி லிருந்து பழையார் மீன்பிடி துறைமுகத்துக்கு செல்லும் சாலையில் புதுப்பட்டினத் தில், ஊராட்சி பகுதிகளில் பல்வேறு இடங்களில் சேகரி க்கப்படும் குப்பைகள் தினந் தோறும் ஒரே இடத்தில் குவியலாக கொட்டப்பட்டு வருகிறது. குப்பை கொட்டப் பட்டுள்ள இடத்துக்கு மிக அருகாமையில் கடலோர காவல் நிலையம், குடியிருப் புகள் மற்றும் புயல் வெள்ளப் பாதுகாப்பு மையம் ஆகி யவை அமைந்துள்ளன. உப்பனாற்றங்கரை சாலையில் குப்பைகள் குவி யல் குவியலாக கொட்டப் பட்டு வருவதால் காற்று வேக மாக வீசுகிறபோது ஆற்று தண்ணீரில் கலந்து மாசுபடும் நிலை ஏற்படுகிறது. இந்த குப்பைகளுடன் பிளாஸ்டிக் பொருட்கள், இறந்த விலங்கி னங்கள், கோழி இறைச்சிகள் உள்ளிட்டவையும் சேர்த்து கொட்டப்படுவதால் அப்பகு தியில் துர்நாற்றம் வீசுகிறது. இதனால் சுற்றுப்புறச்சூழல் பெரிதும் பாதிக்கப்படுகிறது. மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று ஊராட்சி குப்பை களை தரம் பிரித்து, அவை களை மறுசுழற்சி செய்வ தற்கு ஊழியர்களை நிய மித்து, அவர்கள் அந்தப் பணி யில் ஈடுபட்டு வருகின்றனர். அப்படியிருந்தும் ஒரே இடத் தில் குப்பை கொட்டப்பட்டு வருகிறது. குப்பைகள் சாலையிலேயே கொட்டப் படுவதால் இருசக்கர வாக னங்களில் செல்வோர் மற்றும் நடந்து செல்பவர்களும் சிர மம் அடைகின்றனர். எனவே கிராம மக்கள் நலன் கருதி யும் சுற்றுப்புறச் சூழலை பாது காக்க வேண்டியும் குப்பை களை வேறு ஒதுக்குப்புற மான இடத்தில் கொட்ட நடவ டிக்கை எடுக்க வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.