districts

img

கடும் ஊனமுற்றோருக்கு ரூ.5 ஆயிரம் உதவித்தொகை வழங்குக! மாற்றுத்திறனாளிகள் சங்க சீர்காழி வட்ட மாநாடு கோரிக்கை

சீர்காழி, பிப்.25 - மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, கொள்ளிடம், முக்கூட்டு எம்.எஸ். திருமண மண்டபத்தில்  வெள்ளிக்கிழமை வட்ட தலைவர் ஆர்.நாகராஜன் தலைமையில் தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாது காப்போர் உரிமைகளுக்கான சங்கத் தின் சீர்காழி வட்ட 4 ஆவது  மாநாடு  நடைபெற்றது. மாவட்டச் செயலாளர் டி.கணே சன் மாநாட்டை துவக்கி வைத்து உரை யாற்றினார். முன்னதாக நகர செயலா ளர் ஆர்.சுரேஷ்குமார் மாநாட்டு கொடியை ஏற்றி வைத்தார். நகரத்  தலைவர் எம்.நடராஜன் அஞ்சலி தீர்மானம் வாசித்தார். மாநிலக் குழு உறுப்பினர் எம்.புருஷோத்தமன் வேலை அறிக்கை வாசித்தார். மாநாட்டை வாழ்த்தி வழக்கறிஞர் எஸ்.ஞானபிரகாசம், வி.ச. மாவட்ட துணை தலைவர் கே.நாகையா, தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவ ட்டத் தலைவர் எஸ்.இளங்கோவன், வாலிபர் சங்க  கொள்ளிடம் ஒன்றி யச் செயலாளர் கே.தேவேந்திரன் உள்ளிட்டோர் மாநாட்டை வாழ்த்தி பேசினர். செயலாளராக எம்.புருஷோத்த மன், தலைவராக ஆர்.நாகராஜன், பொருளாளராக வி.இளங்கோவன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட ஒன்றிய குழு தேர்வு செய்யப்பட்டது. சீர்காழி நகர அமைப்பு குழு தலைவராக எம்.நடராஜன், செயலாளராக ஆர். சுரேஷ்குமார் கொண்ட 5 நபர்கள் அமைப்பு குழுவாக தேர்வு செய்யப் பட்டனர். கொள்ளிடம் ஒன்றிய அமைப்பு  குழு தலைவராக டி.பாலமுருகன், செயலாளராக எஸ்.பாரதிராஜா உள்ளிட்ட 5 பேர் கொள்ளிடம் அமைப்பு குழுவாக தேர்வு செய்யப் பட்டனர். புதிய நிர்வாகிகளை அறிமுகப்படுத்தி மாநில துணைத் தலைவர் பேரா.ஜானகிராஜா சிறப்பு ரையாற்றினார்.  மாற்றுத் திறனாளிகளுக்கு மாத உதவித் தொகையாக 3000 ரூபாயும், கடும் மாற்றுத்திறனாளிகளுக்கு 5000  ரூபாயும் வழங்க வேண்டும். அரசு மற்றும் தனியார் துறைகளில் 5 சதவீத இடஒதுக்கீட்டை முழுமையாக அமல்படுத்த வேண்டும். சீர்காழி தாலுகா அலுவலகத்தின் முன்பு  உள்ள சாலைகள் மாற்றுத்திறனாளி கள் வந்து செல்வதற்கு சிரமமாக  உள்ளது. இதனை சரி செய்ய  வேண்டும். மயிலாடுதுறையிலிருந்து சீர்காழி செல்லும் மாற்றுத்திறனாளி களுக்கு இலவச பேருந்தை இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.