districts

img

சிவகாசியில் பிரதான குடிநீர் குழாய் உடைந்து சாலையில் பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர் விரைவில் சீர்செய்ய பொது மக்கள் வலியுறுத்தல்

சிவகாசி, பிப்.19- சிவகாசி மாநகராட்சிக்கு வரும் பிரதான குடிநீர் குழா யில் உடைப்பு ஏற்பட்டதால் சாலையில் வெள்ளம் போல தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. சிவகாசி அருகே உள்ள வெம்பக்கோட்டை அணை,  சிவகாசி மாநகராட்சி பகுதிக்கு முக்கிய குடிநீர் ஆதார மாக விளங்கி வருகிறது. இங்கிருந்து நாள்தோறும் 15 லட்சம் லிட்டர் குடிநீர் இராட்சத குழாய் மூலம்  மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிக்கு கொண்டு செல்லப்  படுகிறது. பின்பு, அங்கிருந்து பல்வேறு குடியிருப்பு களுக்கு குடிநீர் விநியோகம் செய்யப்படுவது வழக் கம். இந்நிலையில், வெம்பக்கோட்டை சாலையில் உள்ள சத்திரப்பட்டி அருகே பிரதான குடிநீர் குழாயில் திடீ ரென உடைப்பு ஏற்பட்டது. இதன் காரணமாக குடிநீரா னது, சாலையில் வெள்ளமாக பாய்ந்து ஓடியது. இதை யடுத்து, அந்த வழியே சென்ற பொது மக்கள் சிவகாசி மாநகராட்சி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். பின்பு, வெம்பக்கோட்டையில் இருந்து மோட்டார் மூலம்  பம்ப் செய்யும் பணி நிறுத்தப்பட்டது. இதுகுறித்து பொது மக்கள் கூறுகையில், குடிநீர் குழாய் உடைப்பால் லட்சக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாக வெளியேறி வருகிறது. தற்போது, கோடை காலம்  துவங்கி வரும் நிலையில் குடிநீரின் தேவை அதிகமாக  இருக்கும் எனவே,  குடிநீர் குழாய்களில் ஏற்படும் உடைப்பு களை போர்க்கால அடிப்படையில்  மாநகராட்சி நிர்வா கம் சீர்  செய்திட வேண்டும்  என்று வலியுறுத்தினர்.