சிவகங்கை, ஜூன் 1- சிவகங்கை மாவட்டத்தில் 728 கட்டு மானம் மற்றும் அமைப்பு சாரா தொழிலா ளர்களுக்கு 12.5 லட்சம் மதிப்பிலான அரசின் நலத்திட்ட உதவிகள் மற்றும் பாதுகாப்பு உப கரணங்களை ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் வழங்கினார். விழாவிற்கு மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி தலைமை வகித்தார். விழாவில் நல வாரியத் தலைவர் பொன் குமார் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சிக் காலத்தில் நல வாரியங்கள் முடங்கிக் கிடந்தது. ஓய்வூதியங்கள் வழங் கப்படாமல் இருந்தது. தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நலவாரிய உதவி களை உயர்த்தி வழங்குவதற்கு உத்தரவிட்டு அதனை செயல்படுத்திக் கொண்டிருக்கி றோம். ஓய்வூதிய தொகையை உயர்த்துவது தொடர்பாக விரைவில் அறிவிப்பு வரும். தற்போது 10 லட்சம் வாரிய உறுப்பினர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர். அதற்கான திட்டம் வகுத்து சேர்க்கப்பட்டு வருகிறது .திருமண உதவி திட்டம் ரூ. 18 ஆயிரமாக உயர்த்தப் பட்டுள்ளது. நலவாரிய உறுப்பினர்கள் இயற்கை மரணம் என்றால் அவர்களுக்கு ரூ.55 ஆயிரம் வழங்கப்படும் என்று வழங்கப்பட்டு வருகிறது .மூன்று ஆண்டுகள் தொடர்ந்து உறுப்பினராக இருக்கக்கூடிய நல வாரிய உறுப்பினர்களுக்கு வீடு கட்டு வதற்கு ரூ.4 லட்சம் மானியமாக இலவசமாக வழங்கப்பட இருக்கிறது .இத்திட்டத்தை செயல்படுத்துவதற்கு அனைத்து பணி களும் முடுக்கி விடப்பட்டுள்ளது. இவ்விழா வில் ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரியகருப்பன் பேசுகையில், சிவகங்கை மாவட்டத்தில் இதுவரை ஒரு லட்சத்து 37 ஆயிரத்து 119 கட்டுமான தொழிலாளர்கள் கட்டுமான நல வாரியத்தின் கீழ் பதிவு செய்தி ருக்கிறார்கள்.
கடந்த ஓராண்டில் மட்டும் 22,406 தொழிலாளர்கள் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா நல வாரியத்தில் புதி தாக பதிவு செய்யப்பட்டுள்ளனர் .மேலும் 13 ஆயிரத்து 402 பதிவுபெற்ற அமைப்புசாரா மற்றும் கட்டுமான தொழிலாளர்களுக்கு இன்றைய தினம் ரூ.5 கோடியே 86 லட்சத்து 59 ஆயிரத்து 600 நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். இந்நிகழ்வில் மானாமதுரை சட்ட மன்ற உறுப்பினர் தமிழரசி ரவிக்குமார், சிவகங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த், திருப்புவனம் பேரூராட்சி தலை வர் சேங்கை மாறன், காஞ்சிரங்கால் ஊராட்சி மன்ற தலைவர் மணிமுத்து, சிவ கங்கை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் மஞ்சுளா பாலசந்தர், தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், தொழிலாளர் நலத்துறை உதவி ஆணையர்கள் கோடீஸ் வரி ,ராஜ்குமார் நகர்மன்ற துணைத்தலை வர் கார் கண்ணன், நகர்மன்ற உறுப்பினர் சரவணன், சிவகங்கை வட்டாட்சியர் தங்க மணி ஆகியோர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். செய்தி மக்கள் தொடர்புத் துறை அதிகாரி நாகராஜன் பூபதி விழாவை தொகுத்து வழங்கினார்.