திருப்பூர், ஜன.12- திருப்பூரில் ரூ.337 கோடி செல வில் கட்டப்பட்ட புதிய அரசு மருத் துவக் கல்லூரி மருத்துவம னையை புதன்கிழமை மாலை காணொளி வாயிலாக நடைபெற்ற நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடி திறந்து வைத் தார். தமிழகத்தில் மொத்தம் 11 இடங்களில் புதிய மருத்துவக் கல் லூரி மருத்துவமனை திறந்து வைக்கப்பட்டது. இதில் ஒன்றிய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா வரவேற்றார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்தி உரையாற்றியதைத் தொடர்ந்து புதிய மருத்துவக் கல்லூரி மருத்து வமனைகளை பிரதமர் மோடி திறந்து வைத்தார். திருப்பூர் புதிய அரசு மருத்து வக் கல்லூரி மருத்துவமனை பெரிச்சிபாளையத்தில் உள்ள அரசு மருத்துவமனை வளாகத் தில் 15 ஏக்கர் பரப்பளவில் கட்டப் பட்டுள்ளது. இதில் மூன்று தொகு திகளாக புதிய கட்டிடங்கள் கட்டப் பட்டுள்ளன. 4 எண்ணிக்கையி லான மருத்துவமனை கட்டிடங் கள் ரூ.125 கோடியே 74 லட்சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், இரண்டு எண் ணிக்கை மருத்துவக் கல்லூரி கட்ட டங்கள் ரூ.107 கோடியே 21 லட் சத்து 50 ஆயிரம் மதிப்பிலும், 15 எண்ணிக்கையிலான மருத்துவ பணியாளர்கள் குடியிருப்பு கட்டி டங்கள் ரூ.104 கோடி மதிப்பீட்டி லும் கட்டப்பட்டு உள்ளன. இதில் பிரதான மருத்துவ கல்லூரி கட்டி டம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலை யில், இன்னும் இதர கட்டிடங்கள் தொடர்ந்து கட்டப்பட்டு வருகின் றன. மொத்தம் சுமார் 10 லட்சம் சதுர அடி பரப்பளவில் பிரம்மாண்ட மாக இந்த மருத்துவக் கல்லூரி மருத்துவமனை கட்டிடம் அமைந் துள்ளது. மொத்தம் 150 மருத்துவ மாணவர்கள் சேர்க்கைக்கு இந் திய மருத்துவ கவுன்சில் அனுமதி வழங்கியுள்ளது. நடப்பு ஆண்டில் முதல் கட்டமாக 100 எண்ணிக்கை மாணவர்கள் சேர்க்கப்படுவார் கள் என்று அரசு மருத்துவக் கல் லூரி வட்டாரத்தினர் தெரிவித்த னர். மருத்துவமனையில் தரை தளம் மற்றும் ஐந்து தளங்கள் இருக்கும். 600 படுக்கை வசதி, 12 அறுவை சிகிச்சை அரங்குகள் மற் றும் நவீன ஆய்வகங்கள் அமைந் துள்ளன. கல்லூரி கட்டிடத்தில் தரை மற் றும் 6 தளங்கள் இருக்கும். எட்டு துறைகளுக்கான வகுப்பறை, ஆய்வக, நூலக வசதி மற்றும் 1000 பேர் அமர்வதற்கான கலை அரங் கம் உள்ளது. குடியிருப்பில் கல் லூரி முதல்வர், நிலைய மருத்துவ அலுவலர் மற்றும் உதவி நிலைய மருத்துவ அலுவலர் குடியிருப்பு களும், மருத்துவ மாணவ, மாண வியர் மற்றும் செவிலியர் விடுதி, மருத்துவ ஆசிரியர் மற்றும் பணி யாளர் குடியிருப்புகளும் இடம் பெறுகிறது. இந்த வளாகத்தில் சுத் திகரிக்கப்பட்ட குடிநீர் வசதியும், கழிவுநீர் சுத்தகரிப்பு மற்றும் விளையாட்டு மைதான வசதிக ளும் ஏற்படுத்தப்பட்டு உள்ளன. இந்த திறப்பு விழா நிகழ்வில் ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், மாநில அமைச்சர்கள் மு.பெ.சாமிநாதன், கயல்விழி செல்வராஜ், திருப்பூர் தெற்கு சட்ட மன்ற உறுப்பினர் க.செல்வராஜ், மாவட்ட ஆட்சியர் எஸ்.வினீத், மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக் டர் முருகேசன், பொதுப்பணித் துறை கட்டிடங்கள் தலைமைப் பொறியாளர் ஆர்.இளஞ்செழி யன், அரசு மருத்துவமனை மருத் துவர்கள், மருத்துவப் பணியாளர் கள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.