districts

img

சிவகங்கை அருகே பீஜப்பூர் சுல்தான் காலத்து செம்புக்காசுகள் கண்டெடுப்பு

சிவகங்கை, மே 16- சிவகங்கை அரசனேரி கீழ மேடு  பகுதியில் பீஜப்பூர் சுல்தான் காலத்து உலோகக் காசுகள் கண்டெடுக்கப் பட்டன. சிவகங்கை தொல்நடைக் குழு வைச் சேர்ந்த க.சரவணன் மூன்று உலோகச் சில்லுகள் கிடைத்ததாக சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவ னர் புலவர் கா.காளிராசாவிடம் ஒப்ப டைத்தார். இதுகுறித்து சிவகங்கை தொல் நடைக்குழு நிறுவனர் புலவர் கா. காளிராசா செய்தியாளரிடம் கூறியதா வது: சிவகங்கையை அடுத்த அரச னேரி கீழே மேடு பேச்சிக்குளம் முனிக் கோவிலில் மூன்று உலோகச் சில்லு கள் கிடைத்ததாக என்னிடம் ஒப்ப டைத்தார். இது செம்பால் செய்யப்  பட்டதாக இருந்தாலும் நேர்த்தியான வட்ட வடிவில் இல்லாமல் முன்னும்  பின்னுமாக இருந்தது/ இதிலுள்ள  வேறுபட்ட எழுத்து வடிவத்தை கொண்டு காசு என்பதை உறுதி செய்ய முடிந்  தது. இக் காசுகள் குறித்த முழுமை யான தகவலை தஞ்சை நாணய வியல் அறிஞர் ஆறுமுகம் சீதாராம னின் உதவியோடு ஆய்வு செய்யப் பட்டது.இதில் இவை பீஜப்பூர் சுல்தான்கள் காசுகள் என்பதை உறுதி செய்ய முடிந்தது.

கர்நாடக மாநிலத்தில் உள்ள பீஜப்பூரைத் தலைநகராகக் கொண்டு வடக்கு கர்நாடகா பகுதியையும் தெற்கு மகாராஷ்டிரப் பகுதியையும் 1490 ஆம் ஆண்டிலிருந்து 1686 ஆம் ஆண்டு வரை ஆட்சி புரிந்தவர்கள்  பீஜப்பூர் சுல்தான்கள், 1490 இல் பாமினி சுல்தான்களிடம் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு தனி யரசாக இது செயல்பட்டது. யூசுப் அடில் ஷா தொடங்கி 9 அரசர்கள் இப்பகுதியை ஆட்சி செய்தனர்.  நமக்கு கிடைத்துள்ள காசுகள் செம்பால் ஆன அதிக எடை உள்ள தாக உள்ளன .மூன்று காசுகளில் 2 காசுகள் 8 கிராம் எடையும் ஒரு காசு 7 கிராம் எடையுமாக உள்ளன. ஒரு காசில் தேவநாகரி எழுத்தில் ராஜா என்று எழுதப் பெற்றுள்ளது. மற்ற எழுத்துக்கள் பாரசீக எழுத்துக்களில் எழுதப்பட்டுள்ளன. காசு கிடைக்கப்பெற்ற இந்த பகுதி யானது விஜயநகர நாயக்கர் ஆட்சி  காலத்தில் பாளையங்களாக பிரிக்கப் பெற்ற பகுதியிலும் பின்னர் இராமநாதபுர சேதுபதிகளின் ஆட்சி யின் கீழும் 1729 க்குப் பிறகு சிவ கங்கை சீமைப் பகுதியிலும் இருந்தி ருக்கும் விஜய நகர நாயக்கர், சேது பதி, சசிவர்ணர் ஆகியோரது காசாக இல்லாது அதற்கு முந்தைய மதுரை சுல்தான்கள் காசாகவும் இல்லாது இப்பகுதி ஆளுகைக்கு தொடர்பற்று இருப்பதால் இது வணிகத் தொடர் பிலோ அல்லது இறைவழிப் பய ணத்தின் வழியோ இக்காசு இப்பகு திக்கு வந்திருக்கலாம்.

அரிதாய் கிடைத்த காசு
மதுரை, தஞ்சாவூர்,கரூர், திரு நெல்வேலி போன்ற பகுதிகளில் ஆண்டாண்டு காலமாய் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு ஆற்றில் காசுகள் இழுத்து வரப் பெறுவதும் அவற்றை அரித்து சலித்து எடுப்பதும் பல காலங்களாக தொழிலாகவே நடை பெற்று வந்துள்ளன. ஆனால் சிவ கங்கை போன்ற பகுதிகளில் இவ்வா றான காசுகள் கிடைப்பது அரிதாகவே உள்ளது. மேலும் சிவகங்கை தொல் நடைக் குழுவினர் கண்டறிந்த முதல் காசு இதில் என்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.