districts

img

நாட்டரசன்கோட்டை அருகே கல்வட்டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிப்பு

சிவகங்கை, டிச.12- சிவகங்கையை அடுத்த நாட்டரசன் கோட்டை அருகே பெருங்கற்கால கல்வட்  டங்கள், முதுமக்கள் தாழிகள், இரும்பு  உருக்காலை எச்சங்கள் கண்டுபிடிக்கப் பட்டுள்ளன. இதனை சிவகங்கை தொல் நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளி ராசா, கள ஆய்வாளர் சரவணன், இணைச் செயலர் முத்துக்குமரன் ஆகியோர் கண்ட றிந்தனர். இதுகுறித்து சிவகங்கை தொல்நடைக் குழு நிறுவநர் புலவர் கா. காளிராசா செய்தி யாளர்களிடம் கூறியதாவது:  சிவகங்கை தொல்நடைக் குழு உறுப்பி னர்கள் கள ஆய்வில் நாட்டரசன் கோட்டை  தனியார் ஐடிஐ எதிர்ப்புறத்தில் செல்கிற மண்பாதையில் தனியார் ஏற்றுமதி நிறுவ னத்திற்கு எதிர்ப்பகுதியில் அமைந்துள்ள காட்டில் 3500 ஆண்டுகளுக்கு பழமையான கல்வட்டங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.  பெருங்கற்காலத்தில் இறந்தவர்களின் உடல்களை, எச்சங்களை பாதுகாக்க நம் முன்னோர்கள் பெரு முயற்சி எடுத்து கல்  வட்டங்களை அடுக்கியுள்ளனர், மேலும்  அங்கு கிடைக்கக் கூடிய கல் வகைகளைக் கொண்டு அக்கல்வட்டங்கள் உருவாக்கப் பட்டுள்ளன, மலைப்பகுதிகளில் வெள் ளைக் கற்களாலும் சிவகங்கை மாவட்டம் போன்ற செம்மண் நிறைந்த பகுதிகளில் கிடைக்கப்பெறும் செம்புராங்கற்களாலும் கல்வட்டங்கள் அடுக்கப்பட்டுள்ளன.  இவை ஏழுக்கு மேல் காணப்படு கின்றன. அவற்றில் மூன்று, பெரும் பகுதி  சிதைவுறாமல் காணப்படுகின்றன. மற்  றவை பெரும் சிதைவுக்குள்ளாகி கற்கள்  அங்கொன்றும் இங்கொன்றுமாக கல்வட் டங்கள் இருந்ததற்கான எச்சமாக காணப் படுகின்றன.
 இரும்பு உருக்காலை எச்சங்கள்
உலகில் மற்ற நாட்டினர் இரும்பு பயன்  பாட்டை அறியும் முன்னரே தமிழர்கள் இரும்பின் பயன்பாட்டையும் அதை உரு வாக்கவும் அறிந்திருந்தனர், இப்பகுதியில் இரும்பு உருக்காலை எச்சக்கழிவுகளான இரும்பு துண்டுகள் போன்ற கற்களும் மண்  ணாலான குழாய்களும் பெரும் பகுதி காணப்படுகின்றன.
முதுமக்கள் தாழிகள்
இந்த காட்டை அடுத்துள்ள ஓடையின் கரை மருங்கில் மூன்று முதுமக்கள் தாழி கள் சிதைவுற்ற நிலையில் காணக் கிடைக்  கின்றன. ஓடைக்கு முன்புள்ள இந்த காட்டுப்  பகுதி வனத்துறையின் கீழ் வருவதால் கடந்த செப்டம்பர் மாதம் மின்னஞ்சல் வழி வனத்துறையினருக்கும் மாவட்ட ஆட்சி யருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிவகங்கை மாவட்ட பகுதியில் தொடர்ச்சியாக கல்வட்டங்கள், இரும்பு உருக்காலைகள், முதுமக்கள் தாழிகள் காணக் கிடைக்கின்றன என்பதிலிருந்து இப்பகுதிகள் பழங்காலமாக பண்பாடு நிறைந்த மக்கள் வாழ்ந்த பகுதி என்பதை உறுதி செய்ய முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.