districts

img

பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள்‌ ஆர்ப்பாட்டம்

தருமபுரி, மே 12- பட்டுவளர்ச்சித்துறை ஓய்வூதியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தருமபுரியில்‌ ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். ஓய்வுபெற்ற அலுவலர்களுக்கு அனைத்து பதவிகளிலும் இளையவர், முதி யவர் என்ற ஊதிய முரண்பாடுகளை களைய வேண்டும்.ஓய்வுபெற்றவர்களின் பிரச்சனைகளை தீர்க்க இயக்கத்தில் தனி பிரிவு ஏற்படுத்த வேண்டும். தணிக்கை என்ற  பெயரில் ஓய்வூதியர்களிடம் பிடித்தம் செய் வதை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக் கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு பட்டு வளர்ச்சித்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தருமபுரி பட்டு வளர்ச்சித்துறை அலுவல கம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  இந்த ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மண்டல தலைவர் மாயக்கண்ணன் தலைமை வகித்தார்.மண்டல செயலாளர் ஜி.குணசேகரன், மாநில செயற்குழு உறுப்பி னர் எஸ்.சுப்பிரமணியன், மண்டல துணைத் தலைவர் எல்.எஸ்.குமரகுரு, மண்டல இணை செயலாளர்கள் பி.முனிராஜ், டி.காணேசன் ஆகியோர் கோரிக்கைகளை விளக்கி பேசினர். அனைத்து துறை ஓய்வூதி யர் சங்க மாவட்ட செயலாளர் எம்.பெரு மாள், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் எம்.சுருளிநாதன், மின்வாரிய ஓய்வூதியர் சங்க மாவட்ட தலைவர் ஆர்.சுந்தரமூர்த்தி ஆகியோர் வாழ்த்தி பேசி னர். இந்த ஆர்ப்பாட்டத்தில் திரளானோர் கலந்து கொண்டனர்.