சிவகங்கை,பிப்.10- சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக நானோ அறிவியல் தொழில்நுட்பத் துறையின் சார்பில் ஆற்றல் சுற்றுச்சூழல் பயன்பாடு களுக்கான மேம்பட்ட நானோ பொருட்கள் என்ற தலைப்பில் மூன்று நாட்கள் சர்வதேச கருத்தரங்கம் தொடங்கியது. நானோ தொழில்நுட்பத்தில் அதிநவீன ஆராய்ச்சி முடிவுகளை பகிர்ந்து கொள்வதற்கும்,நானோ தொழில்நுட்ப பல்வேறு அம்சங்களையும் ஆற்றல் சுற்றுச்சூழல் தேவைகளில் அதன் பயன்பாட்டை கொண்டுவருவதாகும். இக் கருத்தரங்கிற்கு பல்கலைக்கழக துணைவேந்தர் ரவி தலைமை வகித்தார். துணைவேந்தர் பேசுகையில், இந்தியா வில் வளர்ச்சியடைந்து வரும் ஆற்றல் எரிசக்தித்துறையில் 2030 இல் நமது நாட்டின் பொருளாதாரம் 5 இல் இருந்து 10 டிரில்லியன் அமெரிக்கா டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது புதைபடிவ எரிபொருள்களை மட்டுமே நம்பியிருக்கிறோம். கரியமிலவாயு அதிகம் உமிழ்வு பட்டியலில் இந்தியா உலக அளவில் மூன்றாவது இடத்தில் உள்ளது .நானோ பொருட்களின் பயன்பாடு புதிய ஆராய்ச்சி யினை மேற்கொள்வதன் மூலம் கார்பன் அடர்வை குறைக்கலாம். கார்பன் அடர்வை குறைப்பதற்கு தமிழ்நாடு அரசு பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக 6500 மெகாவாட் திறன்கொண்ட சூரிய ஒளி தகடுகளை அமைத்து இந்திய அளவில் நான்காவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது என்று தெரிவித்தார். அழகப்பா தொழில்நுட்பக் கல்லூரி முதன்மையர் ஜெயவேல், சிலி நாட்டி லுள்ள அடால்ப் பல்கலைக்கழக பேராசிரி யர் மங்களராஜா ஆகியோர் உரையாற்றி னர். 130 ஆய்வுக் கட்டுரைகள் கொண்ட மலரை துரைவேந்தர் ரவி வெளியிட்டார்.