districts

img

விசைத்தறியாளர் போராட்டத்திற்கு தீர்வு காண்க பல்லடத்தில் மார்க்சிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜன.17- காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டி ருக்கும் விசைத்தறியாளர்களின் நெசவுக்கூலி உயர்வு கோரிக் கையை ஏற்று நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பல்லடத்தில் மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் பல்லடம் ஒன்றியக் குழுவின் சார்பில் திங்களன்று பல்லடம் கொசவம்பாளையம் சாலை சந் திப்பில் இந்த ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. இதில் அரசு அறிவித்த கூலி உயர்வை ஏற்றுக் கொண்டு ஜவுளி வியாபாரிகள் உடனடியாக விசைத்தறியாளர்களுக்கு அதை அமலாக்க வேண்டும். பல லட்சம் தொழிலாளர் குடும்பங்கள் வேலையின்றி தவிப்பதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், விசைத்தறி தொழிலாளர்களுக்கு நியாயமான கூலி வழங்க ஏற் பாடு செய்ய வேண்டும் என வலியு றுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங் கள் எழுப்பப்பட்டன. முன்னதாக, இந்த ஆர்ப்பாட் டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் பல்லடம் ஒன்றிய செயலாளர் ஆர்.பரமசிவம்  தலைமை வகித்தார். சிஐடியு திருப் பூர் மாவட்ட விசைத்தறி தொழி லாளர் சங்க செயலாளர் பி.முத்து சாமி கோரிக்கைகளை வலியு றுத்திப் பேசினார். பல்லடம் கூலிக்கு நெசவு செய்யும் விசைத் தறி உரிமையாளர் சங்கத்  தலை வர் வேலுச்சாமி வாழ்த்துரை வழங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாவட்டச் செய லாளர் செ. முத்துக்கண்ணன் நிறை வுரை ஆற்றினார். இந்த ஆர்ப் பாட்டத்தில் 100க்கும் மேற்பட் டோர் கலந்து கொண்டனர். கட்சி யின் ஒன்றிய கமிட்டி உறுப்பி னர்கள் கே.வி.சுப்பிரமணி, மோக னசுந்தரம், துரைசாமி, முருகே சன், முருகசாமி, காந்தி, ராஜேந் திரன் மற்றும் புளியம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் உத்தம ராசு, 63 வேலம்பாளையம் விசைத் தறி உரிமையாளர் சங்க தலைவர் பத்மநாபன், முத்துசாமி உள்ளிட் டோர் பங்கேற்றனர்.