சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் அருகே கண்டரமாணிக்கத்தில் மக்கள் எதிர்ப்பையும் மீறி திறக்கப்பட்ட டாஸ்மாக் மதுபானக் கடையை மூடக் கோரியும், இதற்கு எதிராக போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுக்கும் நபர்கள் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரியும் திருப்புத்தூரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா செயலாளர் ஆறுமுகம் தலைமை வகித்தார். மாநிலச் செயற்குழு உறுப்பினர் மதுக்கூர் இராமலிங்கம், மாநிலக்குழு உறுப்பினர் எஸ்.கே.பொன்னுத்தாய், மாவட்டச் செயலாளர் ஆர்.கே.தண்டியப்பன், பொறுப்புச் செயலாளர் கருப்புச்சாமி, மாவட்டச் செயற்குழு, மாவட்டக்குழு, தாலுகா குழு உறுப்பினர்கள் பேசினர். ஆர்ப்பாட்டத்தில் 300 பெண்கள் உட்பட 700 பேர் பங்கேற்றனர்.