சிவகங்கை, மார்ச் 23- கார்த்தி சிதம்பரம் எம்.பி. மானாமதுரை யில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி யில் கூறியிருப்பதாவது:
“இரண்டாவது முதலமைச்சரையும் (ஹேமந்த் சோரனை அடுத்து கெஜ்ரிவால்) பாஜக அரசு தனது கைப்பாவையான அம லாக்கத்துறை மூலம் கைது செய்துள்ளது. இது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, இந்தியாவின் தலைநகரத்தை உள்ளடக்கிய- ஒரு மாநிலத்தின் முதல மைச்சரை தேர்தலுக்கு முன்பாக கைது செய்திருப்பதை, முழுக்க முழுக்க பழி வாங்கும் செயலாகவும், எதிர்க்கட்சிகளை முடக்கும் செயலாகத்தான் பார்க்க முடிகிறது.
காங்கிரஸ் கட்சியின் கணக்குகளை எல்லாம் முடக்கி, வங்கிக் கணக்கைச் செயல் படுத்த முடியாத அளவிற்குச் செய்துள்ளனர். தற்போது பாஜகவின் நோக்கம் என்ன வென்றால், தேர்தலின் போது எதிர்க்கட்சித் தலைவர்கள் செயலிழந்து இருக்க வேண்டும் என்பதுதான். அமலாக்கத்துறை சோதனை விஷயத்தில் கைது நடவடிக்கை அவசிய மில்லை. ஏனென்றால், பணப்பரிமாற்றத் தில் முறைகேடு என்பதுதான் அமலாக்கத் துறை குற்றச்சாட்டு. அதனை நீதிமன்றம் தான் தீர்மானிக்க வேண்டும். அதற்கு ஆவண ஆதாரம் வேண்டும்.
சட்டப்படி நடக்கிறது என தவறுகளை ஏற்க முடியாது
தமிழ்நாட்டில் முன்னாள் அமைச்சர் ஒருவரையும் கைது செய்து, தற்போது வரை ஜாமீனில் விடாமல் இருப்பது ஏற்றுக் கொள்ள முடியாதது. நீதித்துறைதான் இந்த அடங்காப்பிடாரியான அமலாக்கத் துறையைக் கட்டுப்படுத்த வேண்டும்.
யூதர்களை சட்டப்படிதான் நாசிச ஜெர்மனியில் கொலை செய்தார்கள், இயேசுவைச் சிலுவையில் அறைந்தது கூட அன்றைய ரோமானியர் சட்டப்படிதான், ஆகையால் சட்டப்படி நடக்கிறது என்பதற்காக அது தர்மப்படி நடக்கிறது என்ற அர்த்தம் கிடை யாது. அமலாக்கத்துறை வழக்குகளுக்கு எல்லாம் கைது தேவையே கிடையாது.
எதிர்க்கட்சிகளை முடக்கவே வழக்கு
மணீஷ் சிசோடியா உள்ளிட்டோர் ஆண் டுக்கணக்கில் சிறையில் உள்ளனர். அதற் கான விசாரணை கூட இன்னும் துவங்க வில்லை. இதெல்லாம் எதிர்க்கட்சிகளை முடக்குவதற்காகத் தான் நடக்கிறது. ஆனால் பாஜகவுடன் கூட்டணி வைப்பவர்களிடம் எந்த சோதனையும் நடப்பதில்லை. வழக்குகள் இருந்தாலும் அனைத்தையும் மூடி மறைத்து விடுகின்றனர்.
இந்தியா அணி 40 - 0 என்ற செட் கணக்கில் வெல்லும்
இந்தியா கூட்டணி ஆட்சி அமைத்தால், அதில் திமுகவின் பங்கு அதிகமாக இருக்கும். தமிழிசை சவுந்தர்ராஜன், அண்ணாமலை இருவரும் இதுவரை ஒரு தேர்தலில் கூட வெற்றி பெற்றது கிடையாது. அவர்களை ஊடகங்கள் தான் பூதக்கண்ணாடி வைத்து பிரச்சாரம் செய்கிறது. இந்தியா கூட்டணி 40 - 0 என்ற செட் கணத்தில் வெற்றி பெறும். தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி வேட்பா ளர்கள் தான் எம்.பி.யாக தில்லிக்குச் செல் வார்கள். மற்றவர்கள் வீட்டுக்குச் செல்வார்கள்.
இவ்வாறு கார்த்தி சிதம்பரம் எம்.பி. கூறியுள்ளார்.