districts

img

சிவகங்கை ஸ்பைசஸ் பார்க்கில் புதிய தொழிற்சாலையை ஆட்சியர் திறந்து வைத்தார்

சிவகங்கை, மே 14- சிவகங்கை அருகே மானாகுடி பகுதியில் ஸ்பைசஸ் பார்க்கில் மாவட்ட ஆட்சித் தலைவர் மது சூதனன் ரெட்டி முயற்சியால் புதிய உற்பத்தி தொழிற் சாலை அனைத்து வசதிகளுடன் தொடங்கப்பட்டது.  23 ஏக்கர் பரப்பளவில் ரூ. 28 கோடி ரூபாயில் பல ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கூடங்கள், சீதோஷ்ண நிலை கட்டுப்பாட்டு அறை, சுத்தம் செய்து தரம் பிரிக்கும் இயந்திரங்கள் ஆகியன அமைக்கப்பட்டன. இவற்ற முன்னோக்கி கொண்டு செல்வதற்கு ஒன்றிய பாஜக ஆட்சியாளர்கள் விரும்  பாததால் செயல்படுத்தவில்லை. உரிமம் வழங்கா மல் முட்டுக்கட்டை போட்டு கிடப்பில் கிடந்தது.  திமுக ஆட்சிக்கு வந்த பின்னர் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன், சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி, சிவ கங்கை நகர் மன்ற தலைவர் துரை ஆனந்த் ஆகி யோர் ஸ்பைசஸ் பார்க்கை நல்ல திசை நோக்கி கொண்டு செல்ல முற்பட்டனர். இதனால் புதிய தொழிற்சாலை உருவாகியிருக்கிறது. சிவகங்கை மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூதனன் ரெட்டி முயற்சி யால் ஸ்பைசஸ் பார்க்கில் மஞ்சள் மற்றும் மிளகாய் ஆகியவற்றை கொண்டு தயாரிக்கப்படும் பொருட்க ளின் உற்பத்தி தொடங்கப்பட்டுள்ளது. வேம்பத்தூரை சேர்ந்த தனியார் நிறுவனத்தின் சார்பில் ஒப்பந்த அடிப்படையில் 5 ஆண்டுகளுக்கு அனுமதி அளிக்கப்  பட்டு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது . இதற்கான தொடக்க விழா மாவட்ட ஆட்சித் தலைவர் மதுசூத னன்ரெட்டி தலைமையில் நடந்தது.  இவ்விழாவில் ஸ்பைசஸ் பார்க் இந்திய அரசு செயலாளர் சத்யன், நிர்வாக இயக்குனர் சேதுபதி, சிவ கங்கை நகர் மன்ற தலைவர் துரைஆனந்த், நகர்மன்ற துணைத்தலைவர் கார்கண்ணன் மற்றும் தொழில் முனைவோர்கள் கலந்து கொண்டனர்.