districts

ஏப்.15- 25 வரை சிவகங்கையில் புத்தகத் திருவிழா: ஆட்சியர் தகவல்

சிவகங்கை, மார்ச் 31-  சிவகங்கை நகர் பகுதியில் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பெரிய அளவிலான புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளதாக மாவட்ட ஆட்சியர் மதுசூதன் ரெட்டி தெரி வித்துள்ளார். இதுதொடர்பாக அவர் செய்தியாளர் களிடம் கூறுகையில், ‘‘தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் புத்தகத் திரு விழாக்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இதன்படி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் சிவகங்கை நகர்ப்பகுதியில் முதன்முறை யாக பெரிய அளவில் புத்தகத் திருவிழா வினை பபாசி அமைப்புடன் இணைந்து நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது. புத்தகத் திருவிழா ஏப்ரல் 15 முதல் ஏப்ரல்  25 வரை மொத்தம் 11 நாட்கள் சிவகங்கை மன்னர் மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதில், 110 அரங்குகள் அமைக்கப்படவுள்ளன. தினந்தோறும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். புத்தகத் திருவிழாவினை மாவட்டத்தி லுள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகள், கல்லூரிகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்கள் பயன்பெறும் வகையில், தனித்தனியாக நேரம் ஒதுக்கீடு செய்வ தற்கும் திட்டமிடப்பட்டுள்ளது.  இதனை பொதுமக்களும், மாணவ, மாணவியர்களும் பயன்படுத்திக் கொண்டு, தங்களது அறிவுத்திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண் டார். மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவி யாளர் (வளர்ச்சி) எம்.வீரராகவன், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் அ.கொ.நாக ராஜபூபதி மற்றும் செய்தியாளர்கள் ஆகி யோர் உடனிருந்தனர்.