districts

மாதவராயன்பட்டியில் பாலாற்றின் குறுக்கே பாசன வசதிக்கான அணை கட்டும் பணி துவக்கம்

சிவகங்கை, ஜூன் 15- சிவகங்கை மாவட்டம் மாதவ ராயன்பட்டி கிராமம் அருகே கோட்டை இருப்பு, நாட்டார்மங்கலம் கண்மாய்களுக்கு பாசனவசதி அளிக்கும் வகையில் அணை கட்டு வதற்காக ஜூன் 8ஆம் தேதி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சிவ கங்கை மாவட்ட விழாவில் அடிக்கல் நாட்டினார். இதனைத் தொடர்ந்து ஜூன் 15 அன்று ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெரியகருப்பன் அணை கட்டும் பணி தொடங்கி வைத்தார். பின்னர் அமைச்சர் பேசுகை யில், சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீர்நிலைகளும்  சீரமைக்கப்பட்டு வருகிறது. நீர்நிலை கள் மற்றும் நீர் ஆதாரங்களை உருவாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது விவ சாயம் செய்வதற்கு ஏராளமான நிலங்கள் இருந்தாலும் நீராதாரம் குறைவாக உள்ளதால் வறட்சியான மாவட்டமாக சிவகங்கை இருந்து  வருகிறது. சிவகங்கை மாவட்டத்  தில் 4 ஆயிரத்து 300 ஜமீன் கண்  மாய்களின் நீர் வளத்தை அதி கப்படுத்த வேண்டும் என்று தமிழக முதல்வர் அறிவித்திருக்கிறார். அதன் அடிப்படையில் முதல் கட்ட மாக 41 ஏரிகள் நீர்வள ஆதாரத் துறை மூலம் புனரமைப்பு மேற்  கொள்ளப்பட உள்ளன. திருப்பத் தூர் வட்டம் மாதவராயன் பட்டி  கிராமம் அருகேயுள்ள பாலாற்றின்  குறுக்கே ரூ.7 கோடியில் அணை அமைத்து கோட்டையிருப்பு, நாட்டார்மங்கலம் கண்மாய் களுக்கு பாசன வசதி அளிக்கும் வகையில் இப்பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டார்மங்கலம், கோட்டையிருப்பு, மாதவராயன்பட்டி, கீழ்நிலை போன்ற பகுதிகளில் விவசாயிகள்  மற்றும் பொது மக்களின் வாழ்க்  கைத் தரம் உயரும். கால்நடை களுக்கு நீர் ஆதாரமாக அமையும். நிலத்தடி நீர் செறிவூட்டுவதன் மூலம் கிணற்று பாசனம் வசதி பெறுகிறது. குடிநீர் தேவைகளை நிவர்த்தி செய்யப்படுகிறது. இத்திட்டத்தின் வழியாக 631.27 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று பயன்பெறும். அதிமுக ஆட்சிக்காலத்தில் அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்படாமல் இருந்த சிவகங்கை அருகே உள்ள சீல்டு கால்வாய் புனரமைக்கும் பணி களை புத்துயிரூட்டி மீண்டும் செய்திட ரூ. 22 கோடி ஒதுக்கீடு செய்யப் பட்டுள்ளது என்றார்.  இந்நிகழ்ச்சியில் செயற்பொறி யாளர் கார்த்திகேயன், தேவ கோட்டை கோட்டாட்சியர் பிரபாகரன், திருப்புத்தூர் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் சண்முகவடிவேல் ,உதவி செயற்பொறியாளர்கள் பஞ்சவர்ணம், சங்கர், ஊராட்சி மன்ற தலைவர்கள் திலகவதி பாண்டி யன், சுசீலா, உதவிப்பொறியாளர் ஆனந்த மரியவளவன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.