districts

பூவந்தியில் ரூ.5 கோடி புறம்போக்கு நிலத்தை அரசு கையகப்படுத்துக!

 சிவகங்கை,பிப்.20- சிவகங்கை மாவட்டம் பூவந்தி ஊராட்சி யில் அரசு புறம்போக்கு நிலம் சர்வே எண்  51/2 இல் இரண்டு ஏக்கர் 38 சென்ட் உள்ளது. இதில் ஏற்கனவே ஊராட்சி அலுவலகம்,  கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. அரசு மருத்துவ மனை விரிவாக்கத்திற்கும், அரசு மேல் நிலைப்பள்ளி விரிவாக்கத்திற்கும் அரசு நிலங்கள் தேவைப்படுகிறது. இந்த இடத்தில் நீண்ட காலமாக கருவேல் மரங்கள் வளர்ந்  துள்ளன. இதில் கழிவுநீர் தேங்குகிறது. சமூக விரோதிகள் தங்கி பொதுமக்களுக்கு தொந்தரவு செய்கிறார்கள். இந்த இடத்தை கைப்பற்றி கருவேல் மரங்களை அகற்றி அரசு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்றும் .சர்வே எண் 48இல் 5 ஏக்கர் 13 சென்றுள்ளது. இங்கும் கரு வேலமரங்கள் அகற்ற வேண்டும் என்று  ஊராட்சி மன்ற தலைவி விஜயா ஆறுமுகம்  மனுவில் வலியுறுத்தியுள்ளார்.   மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றியசெயலாளர் அய்யம்பாண்டி, பூவந்தி ஊராட்சி மன்ற  துணைத் தலைவர் மகாலிங்கம், விவசாயத்  தொழிலாளர் சங்க திமுக பொறுப்பாளர் பன்னீர்செல்வம், வீரணன் ஆகியோருடன் சென்று ஊராட்சி மன்ற தலைவி விஜயா  ஆறுமுகம் மாவட்ட ஆட்சித் தலைவரை  சந்தித்து மனு அளித்தார். உடனடியாக நட வடிக்கை எடுக்க மாவட்ட வருவாய்துறை அலுவலருக்கு உத்தரவிடப்பட்டது.