சிதம்பரம், ஜன. 29- சிதம்பரம் நடராஜர் கோவில், பரங்கிப்பேட்டை பாபாஜி கோவில், புவனகிரி யில் உள்ள எல்லையம்மன் கோவில்களில் குடியரசு துணைத்தலைவர் ஜெக தீப் தன்கர் 29-ஆம் தேதி தரிசனம் செய்வதற்கு வருகை தர உள்ளார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் 29-ஆம் தேதி காலையில் தீக்கதிர் நாளிதழில் புவனகிரியில் உள்ள எல்லையம்மன் கோவிலை பாஜக பிரமுகர் ஆக்கிரமிப்பு செய்து பொது மக்களை யாரும் அனுமதிக் காமல் உள்ளதையும் கோவிலை சுற்றி உள்ள ஒரு சமூகத்தின் நிலத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ளது சம்பந்தமாகவும் நீதிமன்ற வழக்கு உள்ளதை புவன கிரி ஒன்றிய மார்க்சிஸ்ட் கட்சியின் செயலாளர் ஸ்டா லின் அளித்த பேட்டி பிரசுரிக்கப்பட்டது.
இது குறித்து உளவுத் துறை தீவிர விசாரணை மேற்கொண்டனர். சம்பவத் தின் உண்மைத் தன்மை அறிந்து 29-ஆம் தேதி புவன கிரியில் குடியரசு துணைத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சி ரத்து செய்யப் பட்டது. கோவில் நிர்வாகம் சார்பில் தீக்கதிர் நாளிதழை யும் இது குறித்து பேட்டி அளித்த சிபிஎம் ஒன்றிய செயலாளர் குறித்து விசாரித்துள்ளனர்.
இந்நிலையில் குடியரசு துணைத்தலைவர் 29-ஆம் தேதி காலை 8 மணிக்கு குடும்பத்தினருடன் 2 ஹெலி காப்டர் மூலம் அண்ணா மலை பல்கலைக்கழக ஹெலிகாப்டர் இறங்கு தளத்துக்கு வந்தார். இதுவரை தமிழக அரசின் சார்பில் தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வெ கணேசன் பூங்கொத்து கொடுத்து சால்வை அணி வித்து வரவேற்றார்.
அவரு டன் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்த னர். இதனை தொடர்ந்து அவர் கார் மூலம் நடராஜர் கோவிலுக்கு வருகை தந்தார். இவரை நடராஜர் கோவில் தீட்சிதர்கள் பூரண கும்ப மரியாதை அளித்து வரவேற்று சாமி தரிசனம் செய்ய அனைத்து ஏற்பாடு களையும் செய்தனர். கோவில் வாயிலிருந்து கோவிலிலுள்ள 21 படி வரை மின்கலன் வாகனத்தில் சென்றார்.
அவருடன் அவரது மனைவி உள்ளிட்ட உறவினர்களும் சென்றனர். இவர் குடும்பத் துடன் கோவில் கனக சபை மீது ஏறி சாமி தரிசனம் செய்தார். இதனைத் தொடர்ந்து பரங்கிப்பேட்டையில் உள்ள பாபாஜி கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய் தார். இவர் கலந்து கொண்ட நிகழ்ச்சிகளில் செய்தி யாளர்களுக்கு அனுமதி இல்லை. இவர் வரு கையையொட்டி சிதம்பரம் நகரத்தில் உள்ள அனைத்து பகுதிகளில் பலத்த காவல் துறையினர் பாதுகாப்பு பணி யில் ஈடுபட்டனர். கோவி லுக்கு பக்தர்கள் எவரும் காலை 7 மணி முதல் 11 மணி வரை அனுமதிக்க வில்லை.
பொதுமக்களை காவல்துறையினர் 2 மணி நேரத்திற்கும் மேலாக பல்வேறு பகுதியில் தடுத்து நிறுத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. மதியம் 12 மணி யளவில் மீண்டும் ஹெலி காப்டர் மூலம் குடியரசுத் துணைத்தலைவர் சென்னை க்கு புறப்பட்டு சென்றார்.