districts

img

காவிரி நீரை திறந்துவிடக்கோரி சிதம்பரத்தில் நாளை ரயில்மறியல்

சிதம்பரம், ஜூலை 14- காவிரியில் உச்சநீதி மன்ற இறுதி தீர்ப்பின்படி தமிழகத்திற்கு கர்நாடக அரசு தண்ணீர் திறக்க வலி யுறுத்தி  காவிரி டெல்டா மாவட்டங்களில்  தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் செவ்வாயன்று (ஜூலை 16)   ரயில் மறியல் போராட்டம் நடைபெற உள்ளது.

இதனையொட்டி சிதம்பரம் தேரடி தெருவில் தவிச கடலூர் மாவட்ட பொருளாளர் ஆர்.ராமச்சந்திரன் தலைமையில் ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் சங்கத்தின் கடலூர் மாவட்ட செயலாளர் ஆர்.கே.சரவணன், தவிச (சிபிஐ)  மாவட்ட செய லாளர் வி.எம்.சேகர், கான்சாகிப் வாய்க்கால் பாசன சங்க செயலாளர் கண்ணன், சிதம்பரம் நகர மன்ற துணைத் தலைவர் முத்துக்குமரன், மாதர் சங்க மாவட்ட துணை செய லாளர் ஜெயசித்ரா, சிபிஐ சிதம்பரம் நகர செய லாளர் தமிமுன் அன்சாரி, விதொச , விசிக விவ சாயிகள் பாதுகாப்பு சங்கம், காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கம்  உள்ளிட்ட சங்கங்களை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

இந்த கூட்டத்தில்  தோழமை இயக்கத்தின் அரசியல் கட்சிகளின் பங்கேற்போடு ஆயி ரத்திற்கு மேற்பட்ட விவ சாயிகளை திரட்டி  ஜூலை 16ஆம் தேதி காலை சிதம்பரம் காந்தி சிலை அருகில் இருந்து பேரணியாக சென்று  ‘ரயில் மறியல்’ போராட்டத்தை நடத்துவது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.