கலைஞர் கனவு இல்லம் மற்றும் ஊரகப் பகுதியில் பழுதடைந்த வீடுகள் பழுதுநீக்கம் செய்தல் திட்டங்களுக்கு போதிய பணியிடங்கள் வழங்க வேண்டும் உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்கள் சங்கம் குன்றத்தூர் வட்டக்கிளை சார்பில் (ஜூன் 27) வியாழனன்று காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. குன்றத்தூர் வட்ட கிளைச் செயலாளர் துரை.மருதன் தலைமையில் சங்கத்தின் மாநிலப் பொருளாளர் எம்.ஆர்.திலகவதி, வட்டார வளர்ச்சி அலுவலர் இரா.வரதராஜன் கிளை நிர்வாகிகள் மோகன், சுந்தர்ராஜன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.