சிதம்பரம், பிப். 2- சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் துவக்கப்பட்டது. அண்ணாமலை பல்கலைக்கழ கழகத்தில் வேளாண்துறை சார்பில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம், அண்ணாமலை பல்கலைக்கழகம் இடையே ஆய்வு மற்றும் கல்வி கூட்டு துவக்கவிழா நடைபெற்றது. விழாவிற்கு தலைமை தாங்கிய பல்கலைக்கழகத் துணைவேந்தர் இராம.கதிரேசன் பேசுகையில், “கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மற்றும் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் இணைந்து வேளாண் ஆராய்ச்சி பணிகளை மேற்கொண்டு வருகிறது”என்றார். அண்ணாமலை பல்கலைக்கழ கத்தின் தொடர் ஆராய்ச்சிகளால் உரு வாக்கிய இயற்கை சீற்றங்களை தாங்கி வளரும் தன்மை கொண்ட சிகப்பி நெல் ரகம், கேரளாவில் கடுமையான வெள்ளத்தைத் தாங்கி நல்ல மகசூல் அளித்து வருகிறது. இதனால் கேரள விவசாயிகளிடம் சிகப்பி நெல் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. கேரளாவின் பல இடங்க ளில் இந்த நெல்லை விவசாயிகள் அதி களவு பரப்பளவில் பாலக்காடு பகுதி களில் விரும்பி சாகுபடி செய்து வரு கிறார்கள் என்றும் அவர் கூறினார்.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள நெல்வயல்களில் மீன், கோழி வளர்ப்பை உள்ளடக்கிய ஒருங்கி ணைந்த கூட்டு பண்ணை விவசாய முறையைத் தமிழகத்தில் உள்ள சிறு விவசாயிகள் முதல் பெரிய விவ சாயிகள் வரை திட்டத்தின் செயல் பாட்டை விளக்கி விவசாயிகளின் வரு மானத்தை 3 மடங்காக உயர்த்து வதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார். சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வு இயக்குனர் அஜய்கோலி பேசுகையில், “தெற்கு ஆசிய நாடுகளில் இயற்கை சீற்றங்க ளை தாங்கி வளரும் புதிய நெல் ரகங்களை உருவாக்குவதில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையம் மற்றும் அண்ணாமலை பல்கலைக்கழகம் இணைந்து செயல்படுகிறது என்றும், தற்போது சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் ஆய்வுகள் அடிப்படை அறிவியல் மற்றும் புவியியல் சார்ந்த தரவுகளை அடிப்படையாகக் கொண்டு செயல்படுவதால் நம்மால் மிகவும் குறுகிய காலத்தில் இனப்பெருக்கம் வாயிலாகப் பருவ மாற்றம் பிரச்சனைகளுக்கு எதிர்ப்புத்தன்மை கொண்ட புதிய ரகங்களை உருவாக்க முடியும்” என்றார். விரா.நாரயணன் நெல் உற்பத்தி யாளர் சங்கத்தின் தலைவர் நட ராஜன், இயக்குநர் ரங்கநாயகி ஆகி யோர் இயற்கை முறையில் விளை வித்த நாட்டு பாசுமதி நெல்லை துணை வேந்தரிடம் வழங்கினர். இதில் சர்வதேச நெல் ஆராய்ச்சி மையத்தின் தெற்கு ஆசிய ஆலொசகர் முனைவர் உமாசங்கர்சிங். தேர்வுத்துறை கட்டுப்பட்டு அதிகாரி பிரகாஷ், மக்கள் தொடர்பு அதிகாரி ரத்தினசம்பத், துணை வேந்தரின் நேர்முக செய லாளர் பாக்கியராஜ், வேளாண் விரி வாக்க மைய இணைபேராசிரியர் ராஜ்பிரவின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.