சேலம், மார்ச் 13- மக்களை மத ரீதியில் பிரிக்கும் ஒன்றிய மோடி அரசின் சிஏஏ சட் டத்தை கண்டித்து, நாடு முழுவதும் போராட்டங்கள் தீவிரமடைந்து வருகிறது. இதன்ஒருபகுதியாக தமிழகத்தில் பல்வேறு இடங்க ளில் ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வரு கிறது. ஒன்றிய மோடி அரசாங்கம் ‘சிஏஏ’ எனப்படும் குடியுரிமை திருத் தச்சட்டத்தை அமல்படுத்தி உள் ளது. விவசாயிகள் போராட்டம், பொதுத்துறை நிறுவனங்கள் விற் பனை, பெண்களுக்கான பாதுகாப் பின்மை, மாநில அரசுகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிதிகள் குறித்து பிரதமர் மோடி வாய் திறக் காமல், மதரீதியாக மக்களை பிளவு படுத்தும் இச்சட்டத்தை அமல்படுத் தியுள்ளார். எனவே, உடனடியாக இச்சட்டத்தை ஒன்றிய அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப் பாட்டத்தில் ஈடுபட்டனர். சேலம் அரசு இருபாலர் கலைக்கல்லூரி முன்பு புதனன்று நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாணவர் சங்க கல்லூரி கிளைச் செயலாளர் கோகுல் தலைமை வகித்தார். இதில் சங்கத்தின் மாவட்ட துணைச் செயலாளர் டார்வின், மாவட்ட நிர் வாகிகள் அபிராமி, கோபாலகிருஷ் ணன் உட்பட பலர் கலந்து கொண்ட னர். கோவை நாடாளுமன்றத் தேர்தல் வர வுள்ள சூழலில், ஒன்றிய மோடி அரசு திட்டமிட்டே மதரீதியாக மக் களை பிளவுபடுத்தும் நோக்கத் தில் சிஏஏ சட்டத்தை கொண்டு வந் துள்ளது. பாஜக அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்தச் சட் டத்தை கண்டித்து, கோவையில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கத் தினர் ஆரப்பாட்டத்தில் ஈடுபட்ட னர். கோவை ஒருங்கிணைந்த நீதி மன்ற வளாக நுழைவாயில் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் என்.ராமர் தலைமை வகித்தார். இதில், அகில இந்திய வழக்க றிஞர் சங்கத்தின் மாநில பொரு ளாளர் மாசேதுங், தேசியக்குழு உறுப்பினர் மு.ஆனந்தன், மாநிலக் குழு உறுப்பினர்கள் கோபால்சங் கர், ராஜ்சிம்மன், பியுசிஎல் தேசி யச் செயலாளர் பாலமுருகன், வழக் கறிஞர்கள் செந்தில்குமரன் (காங்கி ரஸ்), இளங்கோவன் (விசிக), ஆர் தர் குமார் (புரட்சிகர இளைஞர் முன் னணி) உட்பட திரளானோர் கலந்து கொண்டனர். நிகழ்வின் முடிவில் மாவட்டச் செயலாளர் பி.ஜோதிகு மார் நன்றி கூறினார்.