districts

img

நாடாளுமன்ற தேர்தல் பாதுகாப்பு பணிக்காக கோவைக்கு வந்தது துணை இராணுவம்

நாடாளுமன்றத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்புப் பணிகளுக்காக  3 கம்பெனி துணை இராணுவத்தினர் இன்று  கேரளாவிலிருந்து கோவை வந்தனர். 

நாடாளுமன்றத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சியினர் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சாரம் என பணிகளைத் துவங்கியுள்ளனர். இந்நிலையில் நாடாளுமன்றத் தேர்தல் பணிக்காகக் கேரளாவிலிருந்து கோவைக்கு இன்று 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினர் வந்தனர்.கேரள மாநிலம் கொச்சினிலிருந்து கொச்சுவேலி விரைவு ரயில் மூலம் கோவை ரயில் நிலையம் வந்த 3 கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரைத் தேர்தல் பிரிவு காவல்துறை வரவேற்றனர். பின்னர் காவல் துறை பேருந்துகள் மூலம் துணை இராணுவத்தினர் தங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ள பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கோவை மாநகர காவல் துறைக்கு ஒரு கம்பெனி காவல்துறையும்,  திருப்பூர், நீலகிரி மாவட்டங்களுக்கு ஒரு கம்பெனி மத்திய தொழில் பாதுகாப்புப் படையினரும் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட அனுப்பி வைக்கப்பட்டனர். பதற்றமான வாக்குச்சாவடிகளில் ஈடுபடுத்தப் படுவதற்காக 3 கம்பெனி  காவல்துறை  பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

;