ரூ.52.07 கோடியில் 3 ஆவது குடிநீர் திட்டப்பணி
புஞ்சை புளியம்பட்டி நகராட்சி கூட்டத்தில் முடிவு
ஈரோடு, செப்.2- புஞ்சை புளியம்பட்டி நகராட்சியில் ரூ.52 கோடி மதிப்பீட்டில் 3 ஆவது குடிநீர் திட்டப்பணி தொடங்கப்பட உள்ளதாக நகராட்சி கூட்டத்தில் துணைத்தலைவர் பி.ஏ. சிதம்பரம் கூறினார். ஈரோடு மாவட்டம், புஞ்சை புளியம்பட்டி நகராட்சி மன்ற கூட்டம் கூட்டரங்கில் நகராட்சி தலைவர் ஜனார்த்தனன் தலைமையில் நடை பெற்றது. இக்கூட்டத்தில் துணைத்தலைவர் பி.ஏ. சிதம்பரம் பேசுகையில், புஞ்சை புளியம் பட்டி நகராட்சியில் ரூ.52 கோடியே 7 லட்சம் மதிப்பீட்டில் 3 ஆவது குடிநீர் திட்டப்பணி 3 மாதத்தில் தொடங்கப்பட உள்ளது. நக ராட்சிக்கு சொந்தமான இடத்தில் சார் பதி வாளர் அலுவலகம் கட்டப்பட்டுள்ளது. எவ்விதமான அனுமதியும் பெறவில்லை. பத்திரப்பதிவு துறையில் இருந்து நிலத் துக்கு உரிய தொகை பெற ஆணையாளர் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் பவானிசாகர் சட்டமன்ற உறுப்பினருக்கு சத்தியமங்கலத்தில் அலுவலகம் உள்ள சூழ்நிலையில், புஞ்சை புளியம்பட்டி நகராட்சிக்கு சொந்தமான இடத்தில் உள்ள பவானிசாகர் சட்டமன்ற அலுவலகத்தை நக ராட்சி பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். நகராட்சி யில் வரி வசூல் 18 லட்சம் ரூபாய் பாக்கி உள்ளது. அதனை வசூலிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதேபோல் நகராட்சி கடை வியாபாரிகளிடம் வாடகை பாக்கி ரூ.40 லட்சம் உள்ளது. அதனை வசூலிக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார். இதையடுத்து ஆணையளார் முகமது உசேன், நிலுவைத் தொகைகள் விரைந்து வசூலிக்ககப்படும், என்றார். இக்கூட்டத்தில் தினசரி சந்தை ஏலத்தை ரத்து செய்வது, குடிநீர் பராமரிப்பு, மற்றும் டெங்கு காய்ச்சல் ஒழிப்பு பணிக்கு தற் காலிக ஆட்களை நியமித்தல் உள்ளிட்ட 16 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஆபாசமாக படம்: இருவர் கைது
சேலம், செப்.2- சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம் பெண்ணை ஆபாச படம் எடுத்த இருவரை போலீசார் கைது செய்து உள்ளனர். சேலம் இரும்பாலை பகுதியைச் சேர்ந்த 32 வயது பெண். இவர் கடந்த பிப்ரவரி மாதம் சினிமாவில் நடிப்பதற்காக வாய்ப்புகள் தேடி வந்துள்ளார். அப்போது தோழி ஒருவர் கூறியதன் பேரில், சேலம் ஏவிஆர் ரவுண்டானா பகுதியில் தனியார் கட்டிடத்தில் இயங்கி வந்த சினிமா கம்பெனிக்கு சென்றார். அங்கு இடைப்பாடி வீரப்பன்பாளையத்தைச் சேர்ந்த வேல்சத்ரியன், விருதுநகர் மாவட்டம், ராஜாபளை யத்தைச் சேர்ந்த ஜெயஜோதி ஆகியோர் தங்கள் தயாரிக்கும் புதிய படத்தில் வாய்ப்பு தருவதாகவும், அதற்கு பணம் தர வேண்டும் என அப்பெண்ணிடம் கேட்டுள்ளனர். ஆனால் அவர் தன்னிடம் பணம் இல்லை என தெரிவித்துள்ளார். இதை யடுத்து, அப்பெண்ணை சினிமா கம்பெனியில் வேலைக்கு வைத்துக்கொண்டனர். ஆனால் அதற்காக சம்பளத்தை கேட்ட போது கொலை செய்துவிடுவதாக மிரட்டி உள்ள னர். மேலும், நிறுவனத்தின் ஒரு அறையில் பெண்களின் ஆபாசமான போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தது. சில பெண்களை வைத்து படம் எடுப்பதற்கான ஏற்பாடுகள் நடை பெற்றுள்ளது. இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பெண் சூர மங்கலம் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தார். அப்புகாரின் அடிப்படையில், ஆய்வாளர் சுப்புலட்சுமி தலைமையில் போலீசார் அங்கு சென்று ஜெயஜோதி (23), வேல்சத்ரியன் (38) ஆகியோரை பிடித்து வந்து விசா ரணை நடத்தினர். அதில், அவர்கள் பெண்களை வைத்து ஆபாசமாக ஒரு படம் தயாரிக்க இருந்ததும், அதற்காக இளம்பெண்களை தேர்வு செய்ததும் தெரியவந்தது. தொடர்ந்து 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து இரு வரையும் கைது செய்தனர். மேலும், அங்கிருந்த லேப்டாப், கேமரா உள்ளிட் டவற்றை பறிமுதல் செய்தனர். அதில் சில பெண்களின் ஆபாச படங்கள் இருந்ததாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தமிழ் வளர்ச்சித்துறை பேச்சு போட்டிக்கு அழைப்பு
ஈரோடு, செப்.2- ஈரோட்டில் தமிழ் வளர்ச்சித்துறை சார்பில் நடைபெற உள்ள பேச்சுப் போட்டியில் பங்கேற்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர்களின் பிறந்த நாளன்று மாவட்ட அளவில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு ஆண்டுதோறும் பேச்சுப் போட்டிகள் நடத்திப் பரிசுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் பேரறிஞர் அண்ணா, தந்தை பெரியார் ஆகியோரின் பிறந்த நாளான 15.09.2022 மற்றும் 17.09.2022 அன்று பேச்சுப்போட்டிகள் நடத்தப்பட வுள்ளன. பள்ளிப் போட்டி காலை 10 மணி முதலும், கல்லூரிப் போட்டி பிற்பகல் 3 மணி முதலும் நடைபெற உள்ளது. எனவே, இப்போட்டிக்கு மாணவர்கள் விண்ணப்பப் படிவங்களை பள்ளித் தலைமையாசிரியர் அல்லது கல்லூரி முதல்வரிடமிருந்து பெற்றுக்கொள்ளலாம். போட்டி நாளன்று தமிழ் வளர்ச்சித் துணை இயக்குநரிடம் நேரில் அளிக்க வேண்டும். இதில் வெற்றி பெறும் மாணவர்களுக்கு முதல் பரிசாக ரூ.5 ஆயிரம், இரண்டாம் பரிசாக ரூ.3 ஆயிரம், மூன்றாம் பரிசாக ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரி விக்கப்பட்டுள்ளது.
அணை நிலவரம்
திருமூர்த்தி அணை
நீர்மட்டம்: 50.35/60அடி
நீர்வரத்து: 932கன அடி
வெளியேற்றம்:1100 கன அடி
மழையளவு: 1mm
அமராவதி அணை
87.70/90அடி.
1909கனஅடி
1609கன அடி
விநாயகர் சிலை ஊர்வலத்தில் சென்ற மாணவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலி
உடுமலை, செப். 2 - விநாயகர் சிலை கரைப்பு ஊர்வலத்தில் சென்ற கல் லூரி மாணவர் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி பலியானார். விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு திருப்பூர் மாவட் டம் உடுமலைப்பேட்டையில் இந்து முன்னணி சார்பில் விநா யகர் சிலை கரைப்பு ஊர்வலம் வெள்ளிக்கிழமை நடைபெற் றது. இதில் கலந்து கொள்வதற்காக பல்வேறு கிராமங்க ளில் இருந்து இளைஞர்கள் விநாயகர் சிலையை வாகனங் களில் ஏற்றியபடி உடுமலையை நோக்கி பயணித்துள்ளனர்.இந்நிலையில் பள்ளபாளையம் கிராமத்தைச் சேர்ந்த இளை ஞர்கள் டிராக்டர் ஒன்றில் விநாயகர் சிலையை ஏற்றிக் கொண்டு எலையமுத்தூர் பிரிவு அருகே வந்து கொண்டிருந் னர். அப்போது இந்த டிராக்டரில் பயணம் செய்த தியாகரா ஜன் (20) என்ற கல்லூரி மாணவர் டிராக்டரில் இருந்து தவறி கீழே விழுந்து, அதே டிராக்டரின் சக்கரத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். உடனடியாக அந்த இளைஞரை மீட்ட அவரது நண்பர்கள் உடுமலை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்து வர்கள் தெரிவித்தனர். இதையடுத்து தியாகராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக உடுமலை அரசு மருத்துவ மனையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து உடுமலை காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
பிஏபி தண்ணீர் வரும் பாதை அடைப்பு பெண் தீக்குளிக்க முயற்சி
திருப்பூர், செப்.2- திருப்பூர் மாவட்டம், காங்கயம் அருகே தண்ணீர் வரும் பாதையை அடைத்து வைத்து விட்டதாகப் புகார் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறி பெண் ஒருவர் தீக்கு ளிக்க முயற்சி செய்துள்ளார். காங்கயம் அருகே உள்ள சிவன்மலை ஊராட்சிக்கு உட்பட்ட சிக்கரசம்பாளையம் பகுதியைச் சோ்ந்தவர் சாந்தாமணி (55). 4 ஏக்கர் விவசாய நிலத்தில் பிஏபி பாசன கிளை வாய்க்காலின் மூலம் தண்ணீர் பெற்று விவசாயம் செய்து வருகிறார். இந்நிலையில் வாய்க்காலில் இருந்து தண்ணீர் வரும் பாதையை பக்கத்து நிலத்துக்காரர் அடைத்து வைத்துவிட்டதாகக் கூறி, அதி காரிகளிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவ டிக்கையும் எடுக்கவில்லை என கூறப்படுகி றது. இதனால் விரக்தியடைந்த சாந்தாமணி காங்கயம் வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்துள்ளார். மனுவை வாங்கி கொண்டு முறையாக விசாரிக்கவில்லை எனக்கூறி, சாந்தாமணி திடீரென வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கிருந்த துணை வட்டாட்சியர் மற்றும் காவலர்கள் அவ ரிடமிருந்த பெட்ரோல் பாட்டிலை பறித்த னர். இதையடுத்து வட்டாட்சியர் அதிகாரிகள் நேரில் வந்து ஆய்வு செய்வதாக உறுதியளித் ததைத் தொடர்ந்த சாந்தாமணி மற்றும் அவ ரது குடும்பத்தினா் திரும்பிச் சென்றனர்.
இன்று மின்தடை
திருப்பூர் செப்.2- பெருமாநல்லூா் துணை மின் நிலையம், கணக்கம்பா ளையம் மின் அழுத்த பாதை யில் பராமரிப்புப் பணிகள் நடைபெற இருப்பதால் 3ஆம் தேதி (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மதியம் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என மின்வாரியத்தினா் அறிவித் துள்ளனா். மின் தடைபடும் பகுதிகள்: ரோஜா கார்டன், பொடாரம்பாளையம், செந் தில் நகா், பாலாஜி நகா், தாண்டாகவுண்டன்புதூா், அம்மாள் நகா், காளிபாளை யம் ஆதிதிராவிடா் காலனி. பல்லடம் துணை மின் நிலையத்தில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் இருக்காது. மின்விநியோகம் தடைபடும் பகுதிகள்: பல்லடம் நகரம், வடுகபாளையம், சித்தம்ப லம், பணிக்கம்பட்டி, மாதப் பூா், ராசாகவுண்டன்பாளை யம், ராயா்பாளையம், மாணிக்காபுரம், மகாலட்சுமி நகா், அம்மாபாளையம், பனப்பாளையம்.
அணைகளின் நிலவரம்
திருமூர்த்தி அணை நீர்மட்டம்:50.35/60அடி நீர்வரத்து:932கன அடி வெளியேற்றம்:1100கனஅடி அமராவதி அணை நீர்மட்டம்: 87.70/90அடி.நீர்வரத்து:1909கனஅடி வெளியேற்றம்:1609கனஅடி
முத்தரப்பு கமிட்டி - விசைத்தறியாளர்கள் வலியுறுத்தல்
ஈரோடு, செப்.2- தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி திட்டம் உள்ளிட்ட வற்றிக்கு முத்தரப்பு கமிட்டி அமைக்க வேண்டும் என விசைத் தறியாளர்கள் வலியுறுத்தி உள்ளனர். தமிழக அரசின் வேட்டி, சேலை உற்பத்தி திட்டம், விசைத் தறி பேனல் போர்டு திட்டம் மேலும் துறை சார்ந்த திட்டங்கள் விசைத்தறி உறுப்பினர்களுக்கு எவ்வித இடர்பாடும் இல்லா மல் சிறப்பாக சென்றடையவும், வருங்காலத்தில் மேம்படவும் தமிழக அரசு முத்தரப்பு அல்லது நான்கு நபர் குழு அமைக்க வேண்டும் என தமிழ்நாடு விசைத்தறியாளர்கள் சங்க கூட்ட மைப்பினர் வலியுறுத்தியுள்ளனர். அக்குழுவில் அரசு உயர் அதிகாரிகள், கைத்தறி மற்றும் விசைத்தறி கூட்டுறவு சங்க நிர்வாகிகள் மற்றும் தமிழ்நாடு விசைத்தறி சங்கங்களின் டெண்டர் நபர்களுடன் இடம் பெற்றால் சீரிய முறையில் அனைத்து திட்டங்களையும் சிறப்பாக செயல்படுத்த வழி வகுக்கும். ஆகவே தாங்கள் இக்குழுவை அமைக்க உத்தர விட வேண்டும் என ஒருங்கிணைப்பாளர் டி.எஸ்.ஏ.சுப்பிர மணியன் தமிழக முதல்வருக்கு அனுப்பிய மனுவில் தெரி வித்துள்ளார்.
கருங்கல்பாளையத்தில் மாட்டுச்சந்தை
ஈரோடு, செப்.2- ஈரோடு கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற மாட்டுச் சந்தைக்கு 450 மாடுகள் விற்பனைக்கு கொண்டு வர ப்பட்டது. ஈரோடு மாவட்டம், கருங்கல்பாளையத்தில் நடைபெற்ற சந்தைக்கு 50 கன்றுக்குட்டிகள் விற்பனைக்கு கொண்டு வரப் பட்டது. இவைகள் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.16 ஆயிரம் வரை விற்பனை ஆனது. இந்த சந்தைக்கு ஈரோடு, சேலம், திருப்பூர் உள்பட பல்வேறு மாவட்டங்களில் இருந்து விவசாயிகள் மாடு களை விற்பனைக்காக கொண்டு வந்தனர். இதில் 250 பசு, 200 எருமை என மொத்தம் 450 மாடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன. இதில் பசு மாடு ஒன்று ரூ.30 ஆயிரம் முதல் ரூ.75 ஆயிரம் வரையிலும், எருமை மாடு ரூ.30 ஆயிரம் முதல் ரூ.60 ஆயிரம் வரையிலும் விலை போனது. இந்த மாடு களை வாங்குவதற்காக தமிழ்நாடு மட்டுமின்றி கேரளா, கர்நா டகா, ஆந்திரா, தெலுங்கானா, மகாராஷ்டிரா உள்ளிட்ட வெளி மாநிலங்களில் இருந்து வந்திருந்த வியாபாரிகள், விவசா யிகளிடம் நேரடியாக விலை பேசி மாடுகளை வாங்கி வாக னங்களில் ஏற்றி சென்றனர்.
கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 2 பேர் பலி
கோவை, செப்.2- ஆனைமலை அருகே கோவில் சுவர் இடிந்து விழுந்ததில் 13 வயது சிறுவன் உட்பட 2 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள் ளது. கோவை மாவட்டம், ஆனைமலையை அடுத்த எட்டித்துறையில் புத்துமாரியம்மன் கோவில் உள்ளது . இந்த கோவிலின் தடுப் புச்சுவர் பலத்த மழையின் காரணமாக இடிந்து விழுந்தது. இதில், தடுப்புச்சுவரின் இடிபாடுகளுக்குள் அதேபகுதியைச் சேர்ந்த நடராஜ் (50), முருகன் என்பவரின் மகன் ஹரி (13), பிரபு (35), நித்திஷ் (11), நிர்மல் (14) ஆகிய 5 பேர் சிக்கிக்கொண்டனர். இது குறித்து தகவலறிந்த தீயணைப்பு படையி னர் சம்பவ இடத்திற்கு வந்து இடிபாடு களுக்குள் சிக்கியவர்களை மீட்கும் முயற்சி யில் ஈடுபட்டனர். இதில் நடராஜ், சிறுவன் ஹரி ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாப மாக உயிரிழந்தனர். மற்ற 3 பேரையும் தீய ணைப்பு படையினர் மீட்டு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து ஆனைமலை காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரு கின்றனர். இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் ஜி. எஸ்.சமீரன், பொள்ளாச்சி சார் ஆட்சியர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ், வட்டாட்சி யர் பானுமதி, உதவி காவல் ஆய்வாளர் கவு தம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். இதுகுறித்து வட் டாட்சியர் பானுமதி கூறுகையில், கோவில் சுவர் இடிந்து விழுந்து இறந்தவர்களின் குடும்பத்திற்கு பேரிடர் மேலாண்மை ஆணை யத்தின் நிதியில் இருந்து தலா ரூ.4 லட்சம் வழங்கப்பட உள்ளது என்று தெரிவித்தார்.
பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வலியுறுத்தல்
திருப்பூர், செப்.2– அக்டோபர் 2022 முதல் பருத்தி சீசன் ஆரம்பமாக உள்ள நிலையில், எதிர்பார்த்த அளவுக்கு பருத்தி வரத்து இருக்காது என தெரிவதால் பருத்தி, பஞ்சு ஏற்றுமதிக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும் என்று தென்னிந்திய பனியன் உற்பத்தியாளர் சங்கம் (சைமா) தலைவர் ஏ.சி.ஈஸ்வரன் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் வெள்ளியன்று விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்ப தாவது, கடந்த இரு வருடங்களாக கொரோனா தொற்று பாதிப்பாலும், நூல் விலை அபரிமிதமாக உயர்ந்த தாலும் பின்னலாடை உள்நாட்டு, ஏற்று மதி உற்பத்தி, கைத்தறி, விசைத்தறி தொழில்கள் வெகுவாக பாதிக்கப்பட் டன. இந்நிலையில் வரும் அக்டோபர் மாதம் பருத்தி சீசன் ஆரம்பமாகிறது. ஆனால் பருத்தி வரத்து நாம் எதிர் பார்த்த அளவுக்கு இருக்காது போல் தெரிகிறது. அப்படியே வரத்து இருந் தாலும் நமது தேவைக்குத்தான் சரியாக இருக்கும். எனவே பஞ்சு ஏற்றுமதியை உடனே தடை செய்ய வேண்டும். குறிப்பாக, ஏற்றுமதியினால் கிடைக்கும் அந்நியச் செலாவணியை விட உள்நாட்டு தொழில் முனைவோ ரும், தொழிலும் லட்சக்கணக்கான தொழிலாளர்களது வாழ்வாதாரமும் முக்கியமானது என்பதை ஒன்றிய அரசின் உடனடி கவனத்திற்கு கொண்டு செல்வது எங்கள் கடமை. எனவே. உடனடியாக பருத்தி, பஞ்சு ஏற்றுமதியை தடை செய்ய வேண்டும். இக்கோரிக்கையை உடனடியாக பரிசீலனை செய்து தொழிலைக் காப்பாற்ற வேண்டும் என வைகிங் ஏ.சி.ஈஸ்வரன் கேட்டுக் கொண்டுள்ளார்.
மழையால் தொற்று நோய் ஏற்படும் அபாயம் மாவட்ட நிர்வாகம் சார்பில் விழிப்புணர்வு
நாமக்கல், செப்.2- மழையால் தொற்று நோய் ஏற்படும் நிலை யில், முன்னெச்சரிக்கையுடன் இருக்குமாறு மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. வடகிழக்கு பருவமழை தீவிரமடைந் துள்ளதால் நாமக்கல் மாவட்ட நிர்வாகம் பல் வேறு முன்னெச்சரிக்கை மற்றும் விழிப்பு ணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தற்போது மழையின் தாக்கம் அதிகமாக இருப்பதால் பொது மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல், டெங்கு, மலேரியா, மஞ்சட்காமாலை, காலரா மற்றும் வாந்தி பேதி போன்ற நோய்கள் ஏற்படும். எனவே, பொது மக்கள் அனைவரும் நன்கு கொதித்து ஆறிய நீரினையே குடிநீராக பயன்படுத்த வேண்டும் அல்லது குளோரினேசன் செய்யப் பட்ட நீரினை மட்டுமே குடிக்க வேண்டும். சூடான உணவு பொருட்களை மட்டுமே உண்ண வேண்டும். மேலும், மழைக்காலங்களில் வீட்டைச் சுற்றிலும் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பயன்படுத்தாத உரல், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவைகளில் மழைநீர் தேங்கினால் பார்த்து கொள்ள வேண்டும். எனவே, பொது மக்கள் அனைவரும் விழிப்புடனும், முன்னெச் சரிக்கையுடனும் இருக்க வேண்டுமென மாவட்ட நிர்வாகம் கேட்டுகொண்டுள்ளது.
கிராமத்திற்குள் ஜோடியாக வந்த சிறுத்தை
உதகை, செப்.2 - குன்னூர் அருகே உள்ள பேரட்டி கிராமத்தில் இரவு நேரத்தில் ஜோடியாக சிறுத்தைகள் உலா வருவதால் அப்பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். நீலகிரி மாவட்டம், குன்னூர் பேரட்டி கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்த கிராமத்தை சுற்றிலும் வனப்பகுதி தேயிலை தோட்டம் ராணுவ குடியிருப்பு போன்றவை அமைந்துள்ளது. இப்பகுதி யில் அவ்வப்போது சிறுத்தை நட மாட்டம் இருப்பதாக சிலர் கூறி வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராமன் என்பவர் வீட்டில் இரண்டு நாய்களை சிறுத்தை வேட்டையாடி சென்றுள்ளது. மீண்டும் வியாழனன்று இரவு சிறுத்தை அதே இடத்திற்கு ஜோடியாக வந்தது. வீட்டை சுற்றி நோட்டம் இட்டுவிட்டு பின்னர் திரும்பிச் சென்றது. இந்த காட்சி அங்குள்ள வீட்டின் கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ளது. இந்த காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானதை தொடர்ந்து வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். மீண்டும் சிறுத்தை நடமாட்டம் இருந்தால் கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ள போவதாக தெரிவித்துள்ளனர்.