கோவை, ஜன. 6- வ.உ.சி உயிரியல் பூங்கா வில் இருந்த 17 பாம்புகள் சிறுவாணி வனப்பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டன. வ.உ.சி உயிரியல் பூங்கா வில் உயிரினங்களுக்கான போதுமான இடமில்லா ததால், அதை மூட மத்திய வன பாதுகாப்பு ஆணையம் கடந்த ஆண்டு உத்திரவிட்டது. இதனைய டுத்து உயிரியல் பூங்கா மூடப்பட்ட நிலை யில், பூங்காவில் இருந்த உயிரினங்கள் சென்னை வண்டலூர் உயிரியல் பூங்கா விற்கும், வனப்பகுதிக்கும் மாற்றப்பட்டன. இந்நிலையில், பூங்காவில் மீதமிருந்த 17 பாம்புகளை பிடிக்க வனத்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொண்டது. அதன்படி, வனத்துறையினரின் முயற்சியால் பாம்பு கள் பிடிக்கப்பட்டு, வாகனம் மூலம் சிறு வாணி மலைப்பகுதிக்கு எடுத்து செல்லப் பட்டது. வனத்துறை மருத்துவர் சுகுமார் தலைமையில் பாம்புகள் எடுத்துச் செல்லப் பட்டு, சிறுவாணி வனப்பகுதியில் விடுவிக் கப்பட்டன.