திருப்பூர், ஏப்.18- திருப்பூரில் திங்களன்று மதியம் 12.20 க்கு நிழல் இல்லாத நாள் நிகழ்வை மாணவர் கள் கண்டு களித்து, பரிசோதனை செய்து பார்த்து அதை உறுதிப்படுத்தினர். வருடத்தில் இரண்டு முறை சூரியன் சரி யாக நம் தலைக்கு மேலாக உச்சிக்கு வரும் போது எந்த ஒரு பொருளின் நிழலும் பூமியில் விழாது. அப்பொருளுக்கு உள்ளேயே அந் தக் குறிப்பிட்ட நேரத்தில் அதன் நிழல் விழுந்து விடும். இந்த நாளுக்கு பூஜ்ய நிழல் நாள் என்று பெயர். இது எல்லா நாடுகளி லும் தெரியாது. கடக ரேகை, மகர ரேகைக் குள் இருக்கும் நாடுகளில் மட்டுமே தெரியும். இதற்கு காரணம் பூமி 23.5 டிகிரியில் சாய் வாக சூரியனை சுற்றி வருவதால் ஏற்படு வதாகும். இந்த நாளினை வைத்துத்தான் பூமியின் சுற்றளவை நிழல் மூலம் கணக் கிட்டு கண்டுபிடித்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் பெம் பள்ளி மாணவர்கள் திங்களன்று சரியாக 12.20 மணிக்கு நேரடியாக தங்களை வெய்யிலில் நிறுத்தியும், பொருட்களை மேசை மீது வைத்தும் நிழல் விழாத நிகழ்வை பரிசோ தனை செய்து பார்த்தனர்.