districts

img

ஆன்மீக போர்வையில் மக்களை ஏமாற்றும் ஜக்கி வாசுதேவ்

கோவை, ஜூன் 21- ஆன்மீக போர்வையில் மக் களை ஏமாற்றி வரும் ஈசா யோகா  மைய நிறுவனர் ஜக்கி வாசுதேவை கன்டித்து கோவையில் முற் போக்கு அமைப்பினர் ஆர்ப்பாட்டத் தில் ஈடுபட்டனர். கோவை மாவட்டம், தெற்கு வட் டாட்சியர் அலுவலகம் முன்பு ஈசா  யோகா மைய நிறுவனர் ஜக்கி  வாசுதேவை கண்டித்து ஓய்வுபெற்ற வேளாண்துறை  பேராசிரியர் காம ராஜ் தலைமையில் பல்வேறு முற் போக்கு அமைப்பினர் ஆர்ப்பாட் டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப் பாட்டத்தில் காமராஜ் பேசுகை யில், கடந்த நூறு நாட்களாக மண் வளத்தை காப்போம் என்ற பெயரில் உலகம் முழுவதும் சுற்றி வருகின்ற சத்குரு ஜக்கி வாசுதேவ், மக்களுக்கு எதிரான குற்றங்களை செய்து வரு கிற கார்ப்பரேட் சாமியாராக செயல் பட்டு வருகிறார். பெற்றோர்கள் தங் கள் குழந்தைகளை ஈசா யோகா மையத்திலிருந்து மீட்க போராடி வருகின்றனர். உலகத்திலேயே மிஸ்டுகால் விட்டு நதிகளை இணைத்த மாபெரும் சாமியாராக சத்குரு திகழ்கிறார். போளூவாம் பட்டி வனச்சரகத்தில் யானை வழித் தடங்களை ஆக்கிரமித்து, விவசாயி கள், பொதுமக்களின் விளைநிலங் களை ஆக்கிரமித்து, மாட மாளிகை கட்டி வசித்து வருகிறார். மூன்று போகம் நெல் விளைந்த  பூமியில் தற்பொழுது கழிவுநீரை செலுத்தி மண்ணுக்கும், மக்களுக் கும் தீங்கு விளைவித்து வருகிறார். மேலும், அவர் மீது தொடுக்கப்பட் டுள்ள பழைய குற்றங்களை காவல் துறையினர் விசாரிக்க மறுத்து வரு கின்றனர் என காமராஜர் குற்றஞ் சாட்டினார். முன்னதாக, இந்த ஆர்ப் பாட்டத்தில் தமிழ் தேசிய பேரியக் கம், திராவிடர் பேரவை அமைப்பி னர், தந்தை பெரியார் திராவிட கழ கத்தினர், விடுதலை சிறுத்தைகள் கட்சியினர், இந்திய தேசிய லீக் என  பல்வேறு முற்போக்கு அமைப்பினர்  கலந்து கொண்டனர்.

நீதிமன்ற உத்தரவு பாஜகவிற்கு பொருந்தாதா?

சாலை ஓரங்களில் பிளக்ஸ், பேனர்கள் கட்டக்கூடாது என உயர்நீதி மன்ற உத்தரவு பிறப்பித்துள்ளது. தமிழக முதல்வர் கோவை வந்த போது கூட பிளக்ஸ் வைக்க பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது. ஆனால், நேற்று சத்குரு-வை வரவேற்க மாநகரம் முழுவதும் பாஜக  சார்பில் நூற்றுக்கணக்கான பிளக்ஸ், பேனர்கள் கட்டப்பட்டிருந்தது. இதனை அனுமதித்த அப்பகுதி காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து காவல் ஆணையரின் உத்தரவின் பேரில் அனுமதி பெறாமல், விதிமுறை களை மீறி வைக்கப்பட்டிருந்த பேனர்கள் உடனடியாக அகற்றப் பட்டது.