உதகை, ஜன.17- புதர்கள் நிறைந்த தேவர்சோலை மயானத்தை அப் பகுதி இளைஞர்கள் சுத்தப்படுத்தி, பொதுமக்களின் பாராட்டை பெற்றனர். நீலகிரி மாவட்டம், கூடலூர் தாலுகா, தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் ஏராளமானோர் வசித்து வரு கின்றனர். இப்பகுதி மக்களின் பயன்பாட்டிலுள்ள மயா னம், உரிய பராமரிப்பின்றி காடுகள் போல் காட்சி அளித்து வந்தது. அதன் காரணமாக புலிகள் மற்றும் வன விலங்கு கள் நடமாட்டம் அதிகரித்து வந்தது. இதனால் அந்த பகுதி மக்கள் அச்சமடைந்து வந்த நிலையில், ஞாயிறன்று அந்தப் பகுதி இளைஞர்கள் ஒன்றுகூடி மாயனத்தை சுத்தம் செய்தனர். தற்போது அந்த பகுதி சுத்தமாக காணப்படுவ தால் பொதுமக்கள் இளைஞர்களை பாராட்டினர்.