திருப்பூர், ஆக. 17 – 76ஆம் ஆண்டு சுதந்திர தினத்தை முன்னிட்டு கருமாரம்பா ளையம் ஆர்.கே.ஜி.நகரில் வாலிபர் சங்க விளையாட்டு விழா நடத்தப்பட்டது. வாலிபர் சங்கக் கிளைத் தலைவர் ஈ.ரமேஷ் தலைமை ஏற்க எஸ்.சாமிநாதன் வரவேற்றார். குழந்தைகள், சிறுவர்கள், இளைஞர்கள், பெண்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன. இவ்விழாவில் வாலிபர் சங்க மாநில செயற்குழு உறுப்பி னர் அர்ஜூன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்துக்கண்ணன், சிஐடியு மாவட்டத் துணைத்தலைவர் கே.உண்ணிகிருஷ்ணன், கட்சியின் மாநகரக்குழு உறுப்பி னர்கள் பி.மனோகரன், ஈ.வளர்மதி, வாலிபர் சங்க மாநகரச் செயலாளர் விவேக், திமுக 33 ஆவது வட்டச் செயலாளர் ஸ்டார் மணி என்கிற பொன்னுச்சாமி, மதிமுக திருமூர்த்தி, ரத்தி னசாமி, இளைஞர் காங்கிரஸ் மாவட்டச் செயலாளர் சந்தீப் உள்ளிட்டோர் பங்கேற்று விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கினர்.