உடுமலை, செப்.29- இந்திய சுதந்திர போராட்ட வீரர் புரட்சியா ளர் பகத்சிங்கின் 117 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் உடுமலை ஒன்றியக்குழு சார்பில் கொடியேற்று விழா மற்றும் போதை எதிர்ப்பு பரப்புரை பயணம் ஞாயிறன்று நடைபெற் றது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றியத் தலை வர் ஆர்.ராமசாமி தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், போதை கலாச்சாரத்திற்கு முடிவு கட்டி சாராயக்கடையை இழுத்து மூட வேண்டும். அதிகாலை முதலே உடுமலை ஒன்றியம் முழுவதும் நடைபெறும் மது விற்பனையை தடுத்து நிறுத்த வேண்டும். பாலியல் வன்கொடுமை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்களை சீரழிக்கும் பான்பராக், ஹான்ஸ் குட்கா, கஞ்சா போன்ற போதை பொருட்களை சட்டவிரோதமாக விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆன்லைன் ரம்மி விளம் பரங்களை முற்றிலும் தடை செய்ய வேண் டும். அரசு காலிப்பணியிடங்களை உடனடி யாக நிரப்ப வேண்டும். புதிய வேலைவாய்ப்பு களை உருவாக்க வேண்டும். ஆலம்பாளை யம் பிரிவு மலையாண்டி கவுண்டனூர் நால் ரோடு, 9/6 செக் போஸ்ட் போன்ற நெடுஞ் சாலைகளில் அமைந்துள்ள டாஸ்மாக் கடை களை அப்புறப்படுத்த வேண்டும். உடுமலை அரசு மருத்துவமனையில் தலைக்காய சிகிச் சைக்கும், நரம்பியல் சிகிச்சைக்கும் உடன டியாக மருத்துவர்களை நியமிக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப் பட்டது. முன்னதாக உரல் பட்டியில் தொடங்கிய பிரச்சார பயணத்தை மாவட்டத் தலைவர் எஸ்.அருள் கொடியேற்றி துவக்கி வைத்து பேசினார். இதைதொடர்ந்து மருள்பட்டி, ம. கவுண்டனூர், க.நாய்க்கனூர், குரல்குட்டை, ஆலாம்பாளையம், கொங்கலகுறிச்சி, பள்ள பாளையம், ஜல்லிபட்டி, தளி ஆகிய பகுதி களில் பிரச்சாரம் நடைபெற்றது. இதில், ஒன்றியச் செயலாளர் சு.தமிழ் தென்றல், ஒன்றியக் குழு உறுப்பினர்கள் சி.கருப்பசாமி, நித்திஷ், சபரி, மாரிமுத்து, லோகேஸ்வரன், மாசாணி உள்ளிட்டோர் போதையால் சீரழியும் சமூகம் குறித்து பேசினர். முன்னாள் ஒன்றியச் செயலாளர் கனகராஜ் வாழ்த்தி பேசினார்.