கோவை, ஜூன் 26- கள்ளச்சாரய கும்பலுக்கு எதிரான போராட் டத்தில் படுகொலை செய்யப்பட்ட வாலிபர் சங்கத்தின் கடலூர் தியாகிகள் குமார், ஆனந் தன் நினைவாக கோவையில், இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் போதைக்கெதி ரான இருசக்கர வாகன பிரச்சார இயக்கத்தில் திங்களன்று ஈடுபட்டனர். கோவை, பீளமேடு நகர குழு சார்பில் நடைபெற்ற இப்பிரச்சார இயக்கத்திற்கு வாலிபர் சங்க நகர செயலாளர் நா.சக்தி வேல் தலைமை ஏற்றார். நகர தலைவர் ராஜேந் திரன் வரவேற்றார். மார்க்சிஸ்ட் கட்சியின் 24 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினர் பூபதி கொடியசைத்து பிரச்சார இயக்கத்தை துவக்கி வைத்தார். வினோபாஜி நகரில் துவங் கிய இருசக்கர வாகன பிரச்சார இயக்கம், தண் ணீர் பந்தல், ஹோப் காலேஜ், பீளமேடு சாலைகள் வழியாக ஆவாரம் பாளையத்தில் நிறைவடைந்தது. இந்த பிரச்சார இயக்க வரவேற்பு மையத் தில், பொதுப்பள்ளி மேடை பெற்றோர் சங் கத்தின் நிர்வாகி வி.தெய்வேந்திரன், சிஐ டியு முன்னாள் நிர்வாகி கோவிந்தராஜ், வாலி பர் சங்க மாவட்ட நிர்வாகிகள் மணிபாரதி, முத்துமுருகன், ரமேஷ் ஆகியோர் உரையாற் றினர். ஆவாரம்பாளையத்தில் நடைபெற்ற பிரச் சார இயக்க நிறைவு பொதுக்கூட்டத்திற்கு, வாலிபர் சங்கத்தின் மாவட்ட பொருளா ளர் தினேஷ் ராஜா தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்கத்தலைவர்கள் பிரச் சார இயக்கத்தின் நோக்கங்கள் குறித்து உரை யாற்றினர். இதில், கோவை மாவட்ட சிறு தொழில் முனைவோர் கூட்டமைப்பின் செய லாளர் கே.பாண்டியன், மார்க்சிஸ்ட் கட்சியின் மாமன்ற உறுப்பினர் கண்ணகி ஜோதி பாசு வாழ்த்தி உரையாற்றினர். முடிவில், வாலிபர் சங்க பீளமேடு நகரக்குழு பொருளா ளர் ம.ஸ்ரீதர் நன்றி கூறினார். இதில், திரளான இளைஞர்கள் பங்கேற்றனர்.