districts

img

கல்வி நிலையங்களில் மத பிரச்சாரங்களை தடை செய்ய வாலிபர் சங்கம் வலியுறுத்தல்

உடுமலை, ஜூலை 31– பள்ளி, கல்லூரிகளில் மத பிரச்சாரங்களை தடை செய்ய  வேண்டும் என வாலிபர் சங்கத்தின் உடுமலை ஒன்றிய மாநாடு  வலியுறுத்தியுள்ளது.  இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின்  உடுமலை ஒன்றிய மாநாடு உடுமலை ஸ்டாலின் நிலையத்தில் ஞாயிறன்று நடை பெற்றது. வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய தலைவர் தமிழ் தென்றல் தலைமை தாங்கினார்.  மாவட்ட செயலாளர் மணி கண்டன் துவக்கிவைத்து உரையாற்றினார். சிஐடியு மாவட்ட துணை செயலாளர் எஸ்.ஜெகதீசன், ஒன்றிய துணை தலைவர் த.லோகேஸ்வரன் வாழ்த்துரை வழங்கினார்கள். வாலிபர் சங்க உடுமலை ஒன்றிய செயலாளர் குமரகுரு வேலை அறிக் கையை முன்வைத்தார்.  இதில், பள்ளி மற்றும் கல்லூரிகளில் மத பிரச்சாரங்கள் செய்வதை தடை செய்ய வேண்டும். உடுமலை, அரசு மருத்து வமணையை மாவட்ட சிறப்பு மருத்துவமனையாக மாற்ற  வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி நேரங்களில் தனி பேருந் துகளை இயக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. நிர்வாகிகள் தேர்வு இதைத்தொடர்ந்து சங்கத்தின் உடுமலை ஒன்றிய தலை வராக ராமசாமி, செயலாளராக தமிழ் தென்றல், பொருளாராக குமரகுரு, துணைத்தலைவராக மாசாணம், துணை செயலா ளராக பாலகுமார் உள்ளிட்ட ஒன்றியக்குழு தேர்வு செய்யப் பட்டது. மாநாட்டை நிறைவு செய்து மாவட்ட பொருளார் ஓம் பிரகாஷ் உரையாற்றினார்.