கோவை, ஆக. 7- வயநாடு இயற்கை பேரிடரில் பாதிக்கபட்ட மக்களுக்கு வாலிபர் சங்கம் சார்பில் நிவாரண நிதி திரட்டப்பட்டது. கேரள மாநிலம் வயநாடு இயற்கை பேரிடரில் பாதிக்கபட்ட மக்களுக்கு, கோவை மாவட்டம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சூலூர் சித்தநாயக்கன்பாளையம் கிளை சார்பாக புதனன்று செலக்கரிச்சல் ஊராட்சியில் நிவாரண நிதியாக ரூ. 7 ஆயிரத்து 131 ரூபாய் நிதி திரட்டினர். இதில், சூலூர் ஒன்றியக் குழு உறுப்பினர் கந்தசாமி, செலக்கரிச்சல் மற்றம் கிளை நிர்வாகிகள் தமிழ்ச்செல்வன், கேசவன், கார்த்திக் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இதைபோல, அன்னூர் பி.ஜி புதூர் கடைகள் மற்றும் சந்தைப் பகுதியில் உள்ள வியாபாரிகளிடம் நிவாரண நிதி திரட்டப்பட்டது. இதில், வாலிபர் சங்க அன்னூர் ஒன்றியத் தலைவர் பிரதீப், மாவட்ட செயற்குழு உறுப்பினர் தீபிகா, ஒன்றியக் குழு உறுப்பினர் ரூபா மற்றும் மாணவர் சங்க ஒன் றியச் செயலாளர் ஜெகதீஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.