districts

img

ராணுவத்தின் கௌரவத்தை சீர்குலைக்காதே ஈரோட்டில் வாலிபர் சங்கம் ஆர்ப்பாட்டம்

ஈரோடு, ஜூன் 20-  இந்திய இராணுவத்தில் ஒப்பந்த அடிப்படையில் வீரர்களை சேர்க்கும் ‘அக்னி பாத்’ திட்டத்தை கைவிட  வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தி னர் ஈரோடு சூரம்பட்டியில் திங்களன்று  ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.  இந்திய இராணுவத்திற்கு ஒப்பந்த அடிப் படையில் வீரர்களை சேர்க்கும் ‘அக்னிபாத்  திட்டத்தை ஒன்றிய மோடி அரசு அறிவித்துள் ளது. இதனை எதிர்த்து நாடு முழுவதும் பெரும் போராட்டங்கள் நடைபெற்று வருகி றது. இந்திய ராணுவத்தின் கௌரவத்தை சீர்குலைக்காதே, நாட்டின் பாதுகாப்பில் வரவு செலவு பார்க்காதே என்கிற முழக்கங் கள் ஆவேசமாக வெளிப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக ஈரோட்டில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சூரம்பட்டி நகரக் குழு தலைவர்  எம்.கார்த்திகேயன் தலைமை  தாங்கினார். இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம் ஈரோடு மாவட்ட செயலாளர் எம்.சசி, ரயில்வே ஊழியர் சங்கத்தின் கோட்ட முன்னாள் துணைப் பொதுச் செயலாளர்  சி. முருகேசன் ஆகியோர் கண்டன உரையாற் றினர். வாலிபர் சங்க மாவட்ட தலைவர் ஏ. விஸ்வநாதன், இடை கமிட்டி தலைவர்கள்  எம்.லோகநாதன், சதீஷ்குமார், டிபிள்யூ. ஆன்ரோ உள்ளிட்ட ஏராளமானோர் பங் கேற்று ஒன்றிய அரசை கண்டித்து முழக்கங் களை எழுப்பினர்.