districts

img

அங்கன்வாடி மையத்தை சீரமைக்க வலியுறுத்தி வாலிபர் சங்கம் மனு

அவிநாசி, டிச.24- அவிநாசி அருகே முத்து செட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள அங்கன்வாடி மையத்தை சீரமைக்கக்கோரி வாலிபர் சங்கத்தினர் மனு அளித்தனர். இதுதொடர்பாக, இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஒன் றிய நிர்வாகிகள் வடிவேல், பழனிச்சாமி மற்றும் சிபிஎம்  மாவட்ட குழு உறுப்பினர் பழனிச்சாமி, ஒன்றியக்குழு  உறுப்பினர் ரமேஷ் ஆகியோர் வட்டாட்சியர் மற்றும் பேரூ ராட்சி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் அளித்த மனுவில் கூறியிருப்பதாவது, அவிநாசி பேரூராட்சி முத்து செட்டி பாளையம் பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்பு அங் கன்வாடி மையம் அமைக்கப்பட்டது. இங்கு 30க்கும் மேற் பட்ட குழந்தைகள் பயின்று வருகின்றனர். இந்த அங்கன் வாடி மையத்தின் மேற்கூரை சிமெண்ட் சீட்டால் அமைக் கப்பட்ட நிலையில் தற்போது அதன் மேல் செடிகள் முளைத்து, மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ளது. ஆகவே, உடனடியாக மேற்கூரையை பழுதுபார்த்து, அங் கன்வாடி மையத்தை சீரமைத்து தர வேண்டும். அங்கன் வாடி மையத்தில் சுற்றுச்சுவர் எழுப்ப வேண்டும். இதேபோல், தாமஸ் வீதி, வஉசி வீதி பகுதியிலுள்ள அங் கன்வாடி மையத்தை சீரமைத்து  தர வேண்டும் என அம் மனுவில் கூறியிருந்தனர். இம்மனுவைப் பெற்றுக் கொண்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர்.