தருமபுரி, நவ.24- வாலிபர் சங்க நல்லம்பள்ளி வட்ட மாநாட்டில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் தருமபுரி மாவட் டம், நல்லம்பள்ளி வட்ட மாநாடு சனியன்று, நல்லம்பள்ளி யில் நடைபெற்றது. இரா.முத்து தலைமை வகித்தார். கிருஷ்ணவேணி சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். பெரிய நாயகம் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார். மாவட் டச் செயலாளர் எம்.அருள்குமார், முன்னாள் மாணவர் சங்க தலைவர் தி.வ.தனுசன்,ஆகியோர் சிறப்புரையாற்றினர். வாலிபர் சங்க முன்னாள் செயலாளர் எம்.முத்து, பொரு ளாளர் அந்தோனி ராஜ், போக்குவரத்து ஓய்வூதியர் மாவட் டத் தலைவர் கே.குப்புசாமி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இம்மாநாட்டில், சிப்காட் பணிகளை விரைவுப்படுத்தி, இளை ஞர்களின் வேலை வழங்க வேண்டும். அரசு மாணவ, மாணவி கள் விடுதிகளுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய் துத்தர வேண்டும். நல்லம்பள்ளியிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயரத்த வேண்டும். கூடுதலாக கட்ட ணம் வசூலிக்கும் தனியார் பள்ளி, கல்லூரிகள் மீது நடவ டிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் நல்லம் பள்ளி வட்டத் தலைவராக த.அரவிந்த், வட்டச் செயலாள ராக இரா.முத்து, பொருளாளராக கோ.கிருஷ்ணவேணி ஆகி யோர் தேர்வு செய்யப்பட்டனர்.