districts

img

தமிழக ஆளுநரை திரும்பப்பெற வேண்டும்

கோவை, டிச.17- தமிழக மக்களுக்கு எதிராக செயல்பட்டு வரும் ஆளுநர் ஆர்.என்.ரவி-யை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி இந்திய ஜன நாயக வாலிபர் சங்கத்தினர் குடியரசு தலை வர் மற்றும் பிரதமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளை யாட்டினால் தற்பொழுது தொடர் தற் கொலைகள் நிகழ்ந்து வருகின்றன. கோவை மாவட்டத்தில் கடந்த வாரம் ஒரு  இளைஞர் தற்கொலை செய்து கொண்டார். எனவே, இந்த விளையாட்டை தடை செய்ய வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, வாலிபர் சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப் புகள், அரசியல் கட்சியினர் தொடர்ந்து கோரிக் கையை முன்வைத்து வருகின்றனர். பல் வேறு இடங்களில் போராட்டங்களும் நடை பெற்று வருகின்றன. இதனிடையே தமிழக அரசு, சட்டமன்றத்தில் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்தை கொண்டு வந்து, ஆளுநர் ஒப்புத லுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. ஆனால், ஆளுநர் கையெழுத்திடவில்லை.  இந்நிலையில், ஆன்லைன் ரம்மியால் தற்கொலை செய்து கொண்ட இளைஞர்க ளுக்கு, தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி-தான்  பொறுப்பு ஏற்க வேண்டும். தமிழக மக்க ளுக்கு எதிராக செயல்படும் ஆளுநர் ஆர். என்.ரவியை திரும்பப்பெற வேண்டும் என  வலியுறுத்தி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குடியரசு தலைவர் மற்றும் பிர தமருக்கு தபால் அனுப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை மாவட்ட ஆட்சியர் அலு வலகம் அருகில் உள்ள தபால் நிலையத்தில் கடிதம் அனுப்ப வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் அர்ஜூன் தலைமையிலான வாலிபர்கள் ஏராளமா னோர், ஆளுநரை திரும்பப்பெற வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இந்த போராட்டத்தில் வாலிபர் சங்க மாவட்ட தலைவர் விவேகானந்தன், பொரு ளாளர் தினேஷ் ராஜா, நிர்வாகிகள் ராஜா, நித்யா, நிசார் அகமது உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக, முழக்கங்களை எழுப்பியதால் காவல் துறையினர் போராட் டக்காரர்களை தடுக்க முயன்றனர். இதனால் வாலிபர் சங்கத்தினருக்கும், காவல் துறையின ருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.