திருப்பூர், அக்.19 - திருப்பூர் மாநகரில் வார்டு எண் 21 மேட்டுபாளையம் பேருந்து நிறுத்தம் காமராஜர் நகர் பகுதியில் அங்கன்வாடி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையம் அருகிலேயே குப்பை கொட்டப்படுவதால் நோய் தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே உடனடியாக குப்பையை அகற்றக் கோரி வாலிபர் சங்கத்தின் சார்பில் தட்டி வைக்கப்பட்டுள்ளது. காமராஜ் நகர் பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகிறார்கள். இச்சாலையில் தினசரி பல்லாயிரக் கணக்கான மக்கள் வந்து செல்கின்றனர். மேலும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் அங்கன்வாடி மையம் உள்பட அரசு அலுவலகங்களும் உள்ளன. இப்பகுதியில் மாநகராட்சி குப்பை தொட்டிகள் வைக்கப்பட்டுள்ளது. குப்பை தொட்டிக ளில் உள்ள குப்பையைவிட சாலையில்தான் குப்பை அதி கமாக உள்ளது. இதனால் இங்குள்ள அங்கன்வாடிக்கு வரும் குழந்தைகளுக்கும், ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரும் நோயாளிகளுக்கும் கடும் நோய் தொற்று ஏற்பட வாய்ப்புள் ளது. இதுகுறித்து மாநகராட்சிக்கு தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. கவுன்சிலரிடம் பலமுறை தகவல் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் உள்ளது. அங்கவாடிக்குவரும் குழந்தைகளுக்கும், மருத்து வமனைக்கு வரும் நோயாளிகளுக்கும், இச்சாலையை பயன் படுத்தும் மக்களுக்கு நோய் தொற்று ஏற்படாமல் தவிர்க்க குப்பை தொட்டிகளை வேறு இடத்திற்கு மாற்ற உரிய நட வடிக்கை எடுக்க வேண்டும் என இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் வடக்கு மாநகரம் சார்பில் தட்டி வைக்கப்பட்டுள் ளது.