districts

img

பராமரிப்பு இல்லாத அம்மா உடற்பயிற்சி நிலையம் சீரமைக்க வாலிபர் சங்கம் கோரிக்கை

திருப்பூர், ஜூன் 22- திருப்பூர் ஆத்துப்பாளையம் எல்லைக்கு உட்பட்ட கூட்டு றவு நகரில் பொங்குபாளையம் ஊராட்சியை சேர்ந்த அம்மா  உடற்பயிற்சி நிலையமானது எந்தவித பராமரிப்பும் இல்லா மல் உபகரணங்கள் அனைத்தும் சேதம் ஏற்பட்டு கேட்பா ரற்று உள்ளது. ஆகவே உடற்பயிற்சி நிலையத்தை பராமரித்து மக்கள்  பயன்பாட்டிற்கு கொண்டுவரக்கோரி இந்திய ஐனநாயக வாலிபர் சங்கம் ஆத்துப்பாளையம் கிளை சார்பாக ஊராட்சி  மன்ற தலைவருக்கும், செயலாளருக்கும் மற்றும் மனு கொடுக்கப்பட்டது. இதில் ஒன்றிய தலைவர் துரை.சதீஸ்குமார், மாவட்டக் குழு உறுப்பினர் சந்தோஷ் இசைப்பிரியன், ஆத்துப்பாளை யம் கிளை ஒருங்கிணைப்பாளர் லோகேஸ்,  விவசாயிகள் சங்க ஒன்றிய செயலாளர் அப்புசாமி மற்றும் கிளை உறுப்பி னர்கள் அனைவரும் கலந்து கொண்டனர்.