சென்னை, ஜூன் 23- காவல்துறையின் அடக்கு முறைக்கு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் எஸ்.கார்த்திக், மாநிலச் செயலாளர் ஏ.வி.சிங்காரவேலன் ஆகியோர் விடுத்துள்ள அறிக்கை யில், தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள்ளச்சாராய உயிரிழப்புகள் மீது உறுதியான நடவடிக்கைக் கோரி மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் சனியன்று போராடிய வாலிபர் சங்க தோழர்களை காட்டுமிராண்டித் தனமாக தாக்கி கைது செய்த காவல் துறையை கண்டிப்பதாக கூறியுள்ள னர். மத்திய சென்னை மாவட்டம் வில்லிவாக்கம் பகுதியில் அயனா வரம் ஜாயின்ட் ஆபீஸ் முன்பு போராட்டம் நடத்த காவல்துறை தரப்பில், அனுமதி மறுக்கப்பட்டி ருந்தது. மீறி நடத்தினால் கைது செய்யப்படுவீர்கள் என்று மிரட்டி னர். கைதாகிறோம் என்று சொன்ன பின்பும், ஆர்ப்பாட்டம் நடத்தும் இடத் தில் நிற்கக்கூட விடாமல் அடாவடித்த னமாக தாக்கி வாகனத்தில் ஏற்றும் முயற்சியில் காவல்துறையினர் ஈடு பட்டனர். அப்பொழுது சங்கத்தின் இணைச்செயலாளரும், 98 ஆவது வார்டு மாமன்ற உறுப்பினருமான பிரியதர்ஷினி காவல்துறையிடம் பேச முற்பட்டபோது, ‘வாயை மூடிட்டு போ’ என்று மிக மோச மான முறையில் திருநாவுக்கரசு என்ற அதிகாரி அதட்டியுள்ளார். அதுமட்டுமல்லாது, அங்கிருந்த ஆண் காவலர்கள் தலைமுடி யைப்பிடித்து இழுத்துள்ளனர். மாவட்டக்குழு உறுப்பினர் நிகில் தேவை கீழே தள்ளிவிட்டதில் தலை யில் காயம் ஏற்பட்டுள்ளது. மாவட்டப் பொருளாளர் பார்த்திபன் மற்றும் சத்யா ஆகியோர் கைகளில் காயங் கள் ஏற்பட்டுள்ளது. பல தோழர்களை நெஞ்சில் அடித்ததால் வலியால் தண் ணீர் கூட குடிக்க முடியாத நிலையில் இருந்தனர். மாவட்டச் செயலாளர் மணிகண்டன் அவர்களை நெஞ்சில் அடித்து, ‘ஒழுங்கு மரியாதையா மேல ஏறு’ என்று மிரட்டியதோடு மட்டுமல்லாமல் காலை பிடித்து இழுத்து காவல்துறை பேருந்திற்குள் தள்ளிவிட்டுள்ளனர். காவல்துறையின் இந்த அராஜ கப்போக்கு கடும் கண்டனத்திற்குரி யது. இந்த அக்கறையை கள்ளச் சாராய விவகாரத்தில் காட்டியிருந் தால் இவ்வளவு உயிர் சேதம் ஏற்பட்டிருக்காது என்றும் வாலிபர் சங்கத் தலைவர்கள் சுட்டிக்காட்டி யுள்ளனர். இதேபோல விழுப்புரம், திண்டுக்கல் ஆகிய மாவட்டங்க ளிலும் ஆர்ப்பாட்டம் நடத்திய தோழர் களை காவல்துறை வலுக்கட்டா யமாக கைது செய்துள்ளது. தமிழக அரசின் காவல்துறை, ஜனநாயக உரிமைகளைப் பறிப்பதை ஒரு போதும் ஏற்க முடியாது. அவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.