திருப்பூர், அக். 30 - இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் 44ஆவது அமைப்பு தினத்தை முன்னிட்டு வாலிபர் சங்கத்தின் ஊத்துக் குளி ஆர்.எஸ். கிளை மற்றும் ஈரோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து ஞாயிறன்று ரத்த தான முகாமை நடத்தினர். ஊத்துக்குளி ஆர்.எஸ் பேரூராட்சி சமுதாய நலக்கூடத் தில் வாலிபர் சங்கத்தின் ஊத்துக்குளி தாலுக்கா குழு உறுப் பினர் சதாம் தலைமையில் நடைபெற்ற இம்முகாமில், இளை ஞர்கள் 22 பேர் குருதிக் கொடை வழங்கினர். முன்னாள் பேரூ ராட்சிமன்றத் தலைவர் ஆர்.குமார், திருப்பூர் மாவட்ட வாலிபர் சங்க ரத்ததான கழக கன்வினர் எஸ்.விவேக், ஊத்துக்குளி பேரூராட்சி துணைத் தலைவர் வி.ஏ.சரவணன், மருத்துவர் கிருஷ்ண சிவாசலபதி, எஸ்.வேல்முருகன், 11-ஆவது வார்டு பேரூராட்சி கவுன்சிலர்,ஏ.யாசின் (எ) சாகுல் அமீத், மார்க் சிஸ்ட் கட்சி கிளைச் செயலாளர் சிவசாமி, வாலிபர் சங்க ஊத் துக்குளி தாலுக்கா செயலாளர் கு.பாலமுரளி, தாலுக்கா பொருளாளர் விக்னேஷ் ஆகியோர் கலந்து கொண்டு குருதி கொடை அளித்தவர்களுக்கு பாராட்டு சான்றிதழ் வழங்கி வாழ்த்தினர். ஆர்.எஸ். கிளை ஊழியர்கள் நாகராஜ், துரை ராஜ், பிரசாந்த், பாரதி, சூர்யா, ஸ்டீபன், கிருஷ்ணன், ரமேஷ், ரஞ்சித் ஆகியோர் கலந்து கொண்டனர்.