சிறுமிக்கு பாலியல் தொல்லை போக்சோவில் இளைஞர் கைது
சேலம், ஜுன் 3- ஓமலூர் அருகே 16 வயது சிறுமியை பாலியல் தொல்லை கொடுத்த இளைஞரை 11 மாதங்களுக்கு பின் ஓமலூர் போலீ சார் பிடித்து போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறை யில் அடைத்தனர். சேலம் மாவட்டம், ஓமலூர் அருகே உள்ள ஊ.மார மங்கலம் ஊராட்சி புதூர் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (26). இவர் பக்கத்துக்கு ஊரான பஞ்சுகாளிப்பட்டியில் பட்டு நெசவு தொழிலில் செய்து வந்தார். இந்நிலையில், கடந்த 2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பஞ்சுகாளிப்பட்டியை சேர்ந்த ஒரு சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக கூறி அழைத்து சென்று பாலியல் வன்கொடுமை நடத்தியுள்ளார். இதையறிந்த சிறுமியின் தாய், ஓமலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில், மணிகண்டன் மீது போக்சோ வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், தலைமறைவாக இருந்த மணிகண்டன், கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை பகுதியில் இருப்பதை அறிந்து அங்கு சென்று சிறுமியின் அக்கா, மணி கண்டனை மற்றும் சிறுமியை ஓமலூருக்கு அழைத்து வந்தார். பின்னர், போலீசாரிடம் மணிகண்டனை ஒப்படைத்தனர். ஏற்க னவே இவர் மீது போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டி ருந்ததால், போலீசார் இவரை ஓமலூர் நீதிமன்றத்தில் நேர் நிறுத்தி சிறையில் அடைத்தனர்.
வாகனங்களை விற்பனை செய்வோர்
பெயர் மாற்றம் செய்வது அவசியம்
தாராபுரம், ஜூன் 3 - பழைய வாகனங்களை வாங்குவோர் விற்பனை செய்யப்பட்ட வாகனத்தின் பெயரை அவசியம் மாற்ற வேண்டும் எனவும், விபத்து உள்ளிட்ட சம்பவம் ஏற்பட் டால், வாகனம் யார் பெயரில் இருக்கிறதோ அவரும் வழக்கில் சேர்க்கப்படுவர் என காவல்துறையினர் எச்சரித்துள்ளனர். வாகனங்களை விற்பனை செய்வோர் விற்பனை மற்றும் பெயர் மாறுதல் செய்வதற்கான ஆவணங்களில் கையெ ழுத்து மட்டும் போட்டு கொடுத்துவிட்டு பணத்தை வாங்கிக் கொள்கின்றனர். ஆனால், வாகனத்தை வாங்குவோரில் பெரும்பகுதியினர், உடனுக்குடன் வாகனத்தின் ஆர்.சி. புத்தகத்தில் பெயர் மாற்றம் செய்வதில்லை. இதனால், பழைய உரிமையாளரின் பெயரிலேயே வாகனம் இயங்கு கிறது. இதுபோன்ற வாகனங்கள் விபத்து அல்லது குற்ற வழக்கில் பறிமுதல் செய்யப்படும்போதும் விசாரணையில் தேவையற்ற தாமதம் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இதுகுறித்து காவல்துறை வட்டாரத்தில் தெரிவிக்கை யில், வாகனம் பெயர் மாற்றம் செய்யப்படாமல் இயக்கப் பட்டு விபத்தில் சிக்கினால் வாகனத்தை ஓட்டி செல்பவர் மட்டு மன்றி அதன் வாகன உரிமம் யார் பெயரில் இருக்கிறதோ அவரும் சட்ட நடவடிக்கைக்கு ஆளாவார். மேலும் அந்த பெயர் மாற்றம் செய்யாமல் இயக்கப்படும் வாகனத்தை ஓட்டிச் சென்று குற்றச்செயல்களில் ஈடுபடும் போது உரிமம் யார் பெயரில் இருக்கிறதோ அவரும் காவல்துறை விசார ணைக்கு உட்படுத்தப்படுவார் எனவே, மற்றொரு நபருக்கு வாகனத்தை விற்பனை செய்வோர், பெயர் மாற்றம் செய்வ தை உறுதி செய்து கொள்ளவேண்டியது அவசியம். ஓட்டுநர் உரிமம் இல்லாமல் இளம் வயதினர் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தும் சம்பவங்கள் தொடர்ந்து நடக்கின்றன. இளம் வயதினருக்கு ஓட்டுவதற்கு வாகனம் தரும் பெற்றோர் மற்றும் உறவினர்கள் மீதும் சட்ட நடவடிக்கை மேற்கொள் ளப்படும என்றனர்.
கள்ளச்சாரயா ஊறல் அழிப்பு
சேலம், ஜூன் 3- சேலம் மாவட்டம். பெத்தநாயக்கன்பாளையம் வட்டம் ,கல்வராயன் மலை கரிய கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர் கிராமத்தில் 750 லிட்டர் கள்ளச் சாராயம் ஊறல் அளிக்கப்பட்டது சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உத்தரவின் பேரில், தனிப்படை போலீசார் தேடுதல் நடவடிக்கையில் ஈடு பட்டனர். து கல்வராயன் மலை கரிய கோயில் காவல் நிலையம் எல்லைக்கு உட்பட்ட மண்ணூர் கிராமத்தில் கள்ளச்சாராயம் காட்சி வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் படி அங்கு சென்றனர். அங்கு கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு தயார் வைத்திருந்த 750 லிட்டர் ஊரலை தரையில் கொட்டி அழித் தனர். மேலும், இதற்கு பயன்படுத்திய பேரல் பாத்திரங்கள் உள்ளிட்டவர்களை அடித்து நொறுக்கி கள்ளச்சாராயம் காய்ச்சிய நபரை தேடி வருகின்றனர்.
வீட்டு வசதி வாரியத்தொடர்பான கோரிக்கை மனுக்கள் வரவேற்பு
ஈரோடு, ஜுன் 3- வீட்டு வசதி தொடர்பான கோரிக்கை மனுக்கள் வரவேற்கப்படுகின்றன. வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் உத்தரவின்படி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தால் வீட்டு வசதி திட்டங்கள் செயல்படுத்திட நிலங்கள் கையகப்படுத்தப்பட்டது. இதுதொடர்பாக பொதுமக்கள் பல்வேறு கோரிக்கைகள் முன் வைத்தனர். இதன் தொடர்ச்சியாக ஈரோடு, சம்பத் நகரில் உள்ள ஈரோடு வீட்டு வசதிப் பிரிவு அலுவல கத்தில் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்டுள்ளது. இதில் ஈரோடு, நாமக்கல், திருப்பூர் ஆகிய மாவட்டங்களிலிரு ருந்து மனுக்கள் வரவேற்கப்படுகிறது. ஜுன் மாதம் 3 ஆம் தேதி முதல் கோரிக்கை பெட்டி வைக்கப்பட்ட நிலையில், பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக் கள் பெறப்படுகின்றன.
காவல் சார்பு ஆய்வாளர் பணி வாய்ப்பு
ஈரோடு, ஜுன் 3- தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வு வாரியத்தால் காவல் சார்பு ஆய்வாளர் (எஸ்ஐ) தேர்விற்கான 621 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கான கல்வித்தகுதி - ஏதாவது ஒரு பட்டப்படிப்பு தேர்ச்சி, வயது வரம்பு- ஓசி - 20-30, பிசி,எம்பிசி-- 20-32, எஸ்சி, எஸ்டி, எஸ்சிஏ -20-35. விண்ணப்பிப்பதற்கான கால வரம்பு ஜூன் 1 முதல் 30 வரை ஆகும். விண்ணப்பிக்க வேண்டிய இணையதள முகவரி https://www.tnusrb.tn.gov.in/. மேலும் விவரங்களுக்கு 0424-2275860, 9499055943 என்ற தொலைபேசியினை தொடர்பு கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ராஜ கோபால் சுங்கரா தெரிவித்துள்ளார்.
கஞ்சா விற்ற மாணவர்கள் 3 பேர் கைது
கோவை, ஜூன் 3- கோவை அடுத்த நவக்கரையில் கல்லூரி மாணவர்கள் சிலர் அறை எடுத்து தங்கி படித்து வந்தனர். இவர்கள் அறையில் கஞ்சா பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக க.க.சாவடி போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. போலீசார் அங்கு சென்று சோதனை செய்த னர். அப்போது அங்கு அரை கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. விசாரணையில், திருச்சூரை சேர்ந்த கல்லூரி மாணவர் அர்ஜுன் என்பவர் கஞ்சா வாங்கி கோவை கொண்டு வந்து நண்பர்களிடம் கொடுத் ததும், மற்ற இருவரும் கஞ்சாவை சிறிய பாக்கெட்டுகளில் அடைத்து சப்ளை செய்த தும் தெரிய வந்தது. இதனையடுத்து போலீ சார் கஞ்சா பதுக்கி விற்பனை செய்த கல்லூரி மாணவர்கள் மூன்று பேரை கைது செய்த னர்.
இணை இயக்குநர் அலுவலக வளாகத்தில் உடும்பு
தருமபுரி, ஜூன் 3- தருமபுரி அருகே இணை இயக்குநர் அலு வலக வளாகத்தில் நுழைந்து நீண்ட நேரம் ஒரே இடத்தில் இருந்த உடும்பை வனத் துறை யினர் பிடித்து வனப் பகுதியில் விடுவித் தனர். தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே அரசு கலைக் கல்லூரி வளாகத்தில் கல்லூரிக் கல்வி இணை இயக்குநர் அலுவ லகம் அமைந்துள்ளது. இந்நிலையில், சுமார் 7 கிலோ எடையுள்ள பெரிய அளவிலான உடும்பு ஒன்று அலுவலக வளாகத்தில் நுழைந்தது. மேலும், ஒரே பகுதியில் நீண்ட நேரமாக அசைவற்ற நிலையில் படுத்துக் கிடந்துள்ளது. இதைக் கண்ட பணியாளர்கள் அருகில் உள்ள வனத்துறை அலுவலகத்துக்கு தகவல் கொடுத்தனர். இதனை தொடர்ந்து, வனத்துறையினர் பாம்புகளை பிடிக்கப் பயன்படுத்தும் பிரத்தியோக உபகரணங்களைப் பயன் படுத்தி உடும்பை இலாவகமாக பிடித்து கூண்டில் அடைத்தனர். இதனை தொடர்ந்து வனத்துறை அதிகாரிகளின் வழிகாட்டுதல் படி அந்த உடும்பை அருகில் உள்ள காப்புக் காட்டில் பாதுகாப்பாக விடுவித்தனர்.
மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது
உதகை, ஜூன் 3- ஊட்டி அருகே கல்லுாரி மாணவி தற்கொலை வழக்கில் வாலிபர் கைது செய்யப்பட்டார். ஊட்டி அருகே தொட்டன்னிபகுதியை சேர்ந்த 19 வயது மாணவி, அவிநாசியில் உள்ள பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். விடுமுறைக்கு வந்த அவர், கடந்த, 30ஆம் தேதி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். மாணவி தற்கொலையில் சந்தேகம் எழுந்ததால், பெற்றோர் கோத்த கிரி போலீசில் புகார் அளித்தனர். ஊட்டி ஆர்.டி.ஓ., துரைசாமி உத்தரவின் பேரில், வரு வாய்த்துறை, போலீசார் முன்னிலையில், மருத்துவ குழுவி னர் உடலை தோண்டி எடுத்து பிரேத பரிசோதனை செய் தனர். போலீசார் கூறுகையில், மாணவியின் பக்கத்து வீட்டை சேர்ந்த நந்தகுமார் (28) என்பவர் மாணவியை காதலித்து பாலியல் தொல்லை கொடுத்து திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியது விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால், மன உளைச்சலுக்கு ஆளான மாணவி தற்கொலை செய்து கொண்டார். நந்தகுமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறோம். என்றார்.
கோவையில் நள்ளிரவில் விபத்து- மாணவர் பலி
கோவை, ஜூன் 3- தேனியை சேர்ந்தவர் ஆண்டவர் என்பவரின் மகன் ஹரி கிருஷ்ணன்(21). இவர் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். நண்பர்களுடன் சேர்ந்து அறை எடுத்து கல்லூரிக்கு சென்று வந்தார். இந்நிலையில் வெள்ளி யன்று நள்ளிரவில் ஹரி கிருஷ்ணன், தனது நண்பர் ஒருவ ரின் இருசக்கர வாகனத்தை வாங்கிக்கொண்டு சக கல்லூரி மாணவர் ஆகாஷ் (18) என்பவருடன் மலுமிச்சம்பட்டி பகுதியில் உள்ள பேக்கரிக்கு டீ குடிக்க சென்றார். பின்னர் இருவரும் டீ குடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் தங் களது அறைக்கு திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது இருசக்கர வாகனத்தை ஹரிகிருஷ்ணன் ஓட்டினார். பின்னால் ஆகாஷ் அமர்ந்திருந்தார். அவர்கள் பொள்ளாச்சி - கோவை ரோடு ஆஞ்சநேயர் கோயில் அருகே வரும்போது வாகனம் நிலை தடுமாறி சென்டர் மீடியனில் பயங்கரமாக மோதியது. இதில் இருவரும் இருசக்கர வாகனத்திலிருந்து தூக்கி வீசப்பட்டு பலத்த காயமடைந்தனர். தலையில் பலத்த அடிபட்ட ஹரி கிருஷ்ணன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். காயத்துடன் துடித்த ஆகாஷை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு சுந்தராபுரத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். விபத்தில் பலியான மாணவர் ஹரி கிருஷ்ணனின் உடலை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர். இந்த விபத்து தொடர்பாக மதுக்கரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.