நாமக்கல், அக்.30- ஒன்றிய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக இந்திய ஜனநாயக வாலிபர் சங் கம், இந்திய மாணவர் சங்கத்தினர் ஞாயி றன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்திய அரசியலமைப்பு சட்டத் திற்கு எதிராகவும், இந்திய ஒருமைப் பாட்டிற்கு கேடு விளைவிக்கும் வகை யில் ஒன்றிய அரசு இந்தி மொழி திணிப் பில் ஈடுபட்டு வருகிறது. இதனை கண் டித்து இந்திய மாணவர் சங்கம், இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திருச் செங்கோடு தாலுகா, ஆனங்கூர் அண்ணா நகர் பேருந்து நிறுத்தம் அருகே ஞாயி றன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க மாவட்ட செயற்குழு உறுப்பினர் சூரிய பிரகாஷ் தலைமை வகித்தார். இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலா ளர் நிருபன் சக்கரவர்த்தி கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார். இதில், வாலிபர் சங்க மாவட்ட செய லாளர் மணிகண்டன், மாணவர் சங்க முன்னாள் மாநிலத் தலைவர் ஏ.டி.கண் ணன், மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சரவணன், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஒன்றிய செயலாளர் மனோகரன், விவசாய சங்க மாவட்ட துணைத்தலைவர் ஆர்.வேலா யுதம் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில், வாலிபர் சங்க நிர்வாகி ஜி. மோகன்குமார் நன்றி கூறினார். இதேபோல், திருச்செங்கோடு அண்ணாசிலை முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு வாலிபர் சங்க நகர துணைச்செயலாளர் ரமேஷ் தலைமை வகித்தார். இதில், வாலிபர் சங்க மாவட்ட செயலாளர் மணிகண்டன், மாணவர் சங்க மாவட்ட தலைவர் தங்கராஜ், மாவட்ட செயலாளர் சர வணன், நகர செயலாளர் சங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.