திருப்பூர், பிப். 6 - நமது நம்பிக்கை மட்டுமே சரி என்ற முன்மு டிவோடு மற்றவற்றைப் புறக்கணித்தால் நாம் முழு உண்மையை அறிய முடியாது என்று ஆன்மிகப் பேச்சாளர் சுகி.சிவம் கூறினார். 19ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழா வின் நிறைவு நாளான ஞாயிறன்று, வெற்றித் தமிழர் பேரவையின் தலைவர் அரிமா எம்.ஜீவானந்தம் தலைமையில் நடைபெற்ற சிந்த னைக் கருத்தரங்கில் சுகி.சிவம் கற்போம், கற் றபடி நிற்போம் என்ற தலைப்பில் சொற்பொழி வாற்றினார். அப்போது அவர் கூறியதாவது: நேற்று இருந்தோர் இன்று இல்லை என்ற பெருமை உடையது இந்த உலகம் என திரு வள்ளுவர் கூறியிருக்கிறார். இதை நேற்று உயிரோடு இருந்தவர்கள், இன்று இறந்து விட் டார்கள் என்ற நிலையாமையை குறிப்பிட்டுச் சொல்வதாகவும் எடுத்துக் கொள்ளலாம். அத னால் என்ன பெருமை இருக்க முடியும்? திருவள்ளுவர் சொன்ன அந்த குறளின் பொருள், மனிதர்கள் நேற்று இருந்தது போல அப்படியே இன்று இருப்பதில்லை. யாராக இருந்தாலும் மாறிக் கொண்டே இருக்கிறார் கள். வளர்ந்து கொண்டே இருக்கிறார்கள் என்பதே இந்த உலகம். அதைத்தான் வள் ளுவர் பெருமை கொண்டது என்கிறார். ஒரு முறை ஓஷோவிடம் ஒருவர், நீங்கள் ஏற்கெனவே சொன்ன உங்கள் கருத்துக்க ளுக்கு முரணாக இப்போது பேசுகிறீர்கள். இப்போது மாற்றிப் பேசுகிறீர்கள். அன்று அப் படிச் சொன்னீர்கள், இன்று இப்படிச் சொல்கி றீர்கள் என்று கேள்வி கேட்டார். அதற்கு பதில ளித்த ஓஷோ, ஆம் நான் கடந்த காலத்தில் பேசியதை மாற்றிததான் பேசுகிறேன். ஏனென்றால் நான் உயிரோடு இருக்கிறேன்! செத்துப் போனவர்கள்தான் மாற்றிப் பேச மாட்டார்கள் என்றார். அதுதான் உண்மை. அனுபவத்தின் மூலமாகவும், கற்றுக் கொள்வ தன் மூலமாகவும் நாம் நமது முந்தைய நிலை யில் இருந்து மாற்றம் அடைகிறோம். வளர்கி றோம். முன்னேறுகிறோம். ஒருவர் எந்த நம் பிக்கை கொண்டவராக இருந்தாலும், எந்த கொள்கையில், சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவ ராக இருந்தாலும் கண்மூடித்தனமாக ஒரே தன்மையில் முன்முடிவோடு இருக்கக் கூடாது.
பழனி கோயிலில் ஆகம விதிப்படி குடமு ழுக்கு நடைபெறவில்லை என்று சிலர் பேசுகி றார்கள். பழனி முருகன் கோயில் சித்தர்கள் உருவாக்கியது. முருகன் சித்தநாதன் என்று அழைக்கப்படுகிறார். அங்கு ஆகமம் கிடை யாது. ஆகமங்களை அறியாதவர்கள், அதைப் பற்றி படிக்காதவர்கள்தான் ஆகம விதிப்படி குடமுழுக்கு நடைபெறவில்லை என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஒருவர் நான் முதலாளித்துவத்தை மட்டுமே நம்புகி றேன். அதை மட்டும்தான் படிப்பேன் என்று இருக்கக் கூடாது, அதேபோல் கம்யூனி ஸத்தை மட்டும்தான் நான் படிப்பேன், வேறு எதையும் படிக்க மாட்டேன் என்று இருக்கக் கூடாது. நமது கருத்து, தத்துவம், சித்தாந்தம் மட்டுமே சரி, மற்றதெல்லாம் முழுக்க தவறு என்று நினைக்கக் கூடாது. அந்த முன்முடிவை விட்டுவிட்டு அனைத்து வித கருத்துக்கள், நிலைகளையும் நாம் கற்க வேண்டும். அப் போதுதான் முழு உண்மையை நாம் அறிந்து ணர முடியும். நாம் எதையும் ஆழமாக கற்க வேண்டும். மேலோட்டமாகப் படிப்பது போதாது. படிப்பது என்பது உணவை சாப்பிடு வது போன்றது, கற்றல் என்பது உணவை செறிப்பது போன்றது.
அதேபோல் இரண்டு விதமான கண் ணோட்டங்கள் இந்தியாவில் உள்ளன. எல் லாமே பிறப்பின் அடிப்படையில் மரபு வழியா கத்தான் தீர்மானிக்கப்படுகிறது என்று ஒரு சாரர் சொல்கின்றனர். மற்றொரு சாரர், பிறப் பின் அடிப்படையில் அல்ல, சமூக சுற்றுச் சூழல், கல்வி அடிப்படையில் தீர்மானிக்கப்ப டுகிறது என்று சொல்கின்றனர். பிறப்பின் அடிப்படையில் மரபு வழியாக தீர்மானிக்கப்ப டுகிறது என்பதையும் முழுமையாக நிராக ரிக்க முடியாது. தூக்கனாங் குருவி கூடு கட்டு வதைப் போல், கரையான் புற்று ஏற்படுத்து வதைப் போல் நம்மால் செய்ய முடியாது. துக் கனாங் குருவிக்கும், கரையானுக்கும் மரபு வழியாக அந்த இயல்பு உருவாகி வருகி றது. ஆனால் அதற்காக பிறப்பின் அடிப்படை யில் மரபு வழியாக நான் உயர்ந்தவன் என்று சொல்வது பெருமை அல்ல. தாத்தன், முப் பாட்டன் வழியாக வந்ததை பெருமையாக நினைக்க என்ன இருக்கிறது. அது பிச்சை! அப்படி மரபு வழியாக வந்தாலும் கூட, கற்றுக் கொள்வதன் மூலம், புத்தகங்க ளையோ, புத்தகங்களாக வாழும் மனிதர்க ளையோ கற்றுக் கொள்வதன் மூலம் நாம் உயர முடியும். எனவே பிறப்பின் அடிப்படை யில் மரபு வழியாக பெறக்கூடிய செயல், குணத்தையும் கூட, கற்றுக் கொள்வதன் மூலம் நாம் மேன்மை அடைய முடியும், மாற் றம் காண முடியும். எனவே கற்றுக் கொண்டு, அதன்படி நிற்போம். இவ்வாறு சுகி.சிவம் கூறி னார். இந்நிகழ்வில் வழக்கறிஞர் ஓ.உதயசூ ரியன் வரவேற்றார். சார் ஆட்சியர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட நூலக அலுவலர் வே.மாதேஸ்வ ரன், சாயஆலை உரிமையாளர்கள் சங்கத் தலைவர் காந்திராஜன், பிரஸ் குமாரசாமி உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆயிரக்கணக் கானோர் இதில் கலந்து கொண்டனர். பின்னல் புக் டிரஸ்ட் பொருளாளர் எஸ்.சுப்பிரமணி யன் நன்றி கூறினார்.