districts

விலைவாசி உயர்வு: வெறிச்சோடிய ஏற்காடு வாரச்சந்தை

சேலம், ஜூலை 30- காய்கறி, மளிகைப் பொருட்களின் விலை  உயர்வால், ஏற்காடு வாரச்சந்தை மக்கள் கூட்டமின்றி ஞாயிறன்று வெறிச்சோடி காணப்பட்டது. சேலம் மாவட்டம், ஏற்காட்டில் 60க்கும் மேற்பட்ட மலை கிராமங்கள் உள்ளன. இக் கிராமங்களில் 30 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. மலை கிராம மக்கள் வாரம் ஒருமுறை காய்கறிகள், பழங்கள், மளிகைப் பொருட்கள் வாங்குவதற் காக ஏற்காடு, ஒண்டிகடை பகுதியில் ஞாயி றன்று சந்தை நடைபெறும். அந்த சந்தையில் மலை கிராமமக்கள் மட்டுமின்றி ஏற்காடு டவுன் பகுதியில் உள்ள உணவு விடுதிகளுக் கும் காய்கறி, பழங்கள் விற்பனை செய்யப் படும். காய்கறி, பழங்கள், மளிகைப் பொருட் கள் வாங்க கூட்டம் அலை மோதும். இந்த சந் தையில் காய்கறி மட்டுமின்றி, மூலிகை பொருட் களும் விற்பனை செய்யப்படும். தற்போது காய்கறி உள்ளிட்ட மளிகை பொருட்களின் விலைவாசி உயர்வால், மலை கிராம மக்கள் பொருட்கள் வாங்க வராததால் வாரச்சந்தை வெறிச்சோடி காணப்பட்டது. இந்த வாரச் சந்தையில் மூன்றாம் ரக தக்காளி கிலோ ரூ.130க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதுகுறித்து இச்சந்தையில் காய்கறி கடை நடத்திவரும் வியாபாரிகள் கூறுகையில், தக் காளி உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர் வால் வியாபாரம் நடை பெறவில்லை. வியா பாரத்திற்ககாக நாங்கள் வாங்கிவந்த காய் கறிகள் வியாபாரம் ஆகாமல் இருப்பதால் பெரிய நட்டம் ஏற்பட்டுள்ளது, என்றார்.