சேலம், பிப்.28- ஏற்காடு கோடை விழா மலர் கண் காட்சிக்கான முன்னேற்பாடுகள் தீவி ரமாக நடைபெற்று வருகிறது. “ஏழைகளின் ஊட்டி” என அழைக் கப்படும் ஏற்காட்டில், ஆண்டுதோ றும் மே மாதத்தில், கோடை விழா மலர் கண்காட்சி நடத்தப்படுகின்றது. நடப்பாண்டு கோடைவிழா மற்றும் மலர் கண்காட்சி நடத்துவதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வரு கிறது. இதில், சுற்றுலா பயணிகளை கவர, மலர் கண்காட்சிக்கான பணி களில் தோட்டக்கலை துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரிகள் கூறுகையில், ஏற் காடு கோடை விழாவில் மலர் கண் காட்சிக்கு தேவைப்படும் மலர் செடி களை நடவு செய்ய தொடங்கியுள் ளோம். அண்ணா பூங்காவில் பால் சம், ஜீனியா, சால்வியா, டெல்பினி யம், ஆஸ்டர், மேரிகோல்டு, சூரிய காந்தி ஆகிய மலர் விதைகள் 25 ஆயி ரம் முதல்கட்டமாக விதைக்கப்பட் டுள்ளன. ஏற்காடு ரோஜா என்று அழைக்கப்படும் டேலியா கட்டிங்ஸ் 3 ஆயிரம் எண்ணிக்கைக்கு மேல் மேட்டுப்பாத்திகளில் நடவு செய்யப் பட்டுள்ளன. மேலும், ரோஜா பூங்கா, அண்ணா பூங்கா, முதலாவது அரசு தாவரவி யல் பூங்கா ஆகியவற்றில், 675 வகை யான ரோஜா செடிகள் என மொத்தம் 6 ஆயிரத்து 750 எண்ணிக்கையில் நடவு செய்யப்பட்டு வருகிறது. ஏற் காட்டில் பருவமழை சீராக பெய் துள்ளதால், தற்போது ஏற்காட்டில் தட்பவெப்ப நிலையும் சீராக உள் ளது. இதனால், தோட்டங்களில் வைக் கப்பட்டுள்ள பூச்செடிகள் செழித்து வளர தொடங்கியுள்ளன. கோடை விழா தொடங்கும்போது, நடவு செய் யப்பட்டுள்ள பூச்செடிகள் முழுமை யாக வளர்ச்சியடைந்து, பூத்துக் குலுங்கி, சுற்றுலா பயணிகளை கவ ரும் என நம்பிக்கை தெரிவித்தனர்.