திருப்பூர், பிப்.2- ஒன்றிய அரசின் பட்ஜெட் பிப் ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்யப் பட்ட நிலையில், அதற்கு அடுத்த நாளான புதன்கிழமை பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக் கப்பட்டது. சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாதந்தோறும் முதல் தேதியில் பருத்தி நூல் விலை நிர்ணயம் செய்யப்படுவது வழக்கம். கடந்த ஓராண்டு காலமாக நூல் விலை ஏறுமுகமாக இருந்து வருகிறது. குறிப்பாக நவம்பர் மாதம் கிலோ வுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டது. டிசம்பரில் சற்று குறைக்கப்பட்டு மீண்டும் ஜனவரியில் ரூ.30 அதி கரிக்கப்பட்டது. கடந்த ஓராண்டு காலத்திற்குள்ளாக நூல் விலை ஏறத்தாழ நூறு சதவிகிதம் அதிக ரித்து உள்ளது. இந்நிலையில் சர்வ தேச பருத்தி சந்தையில் பஞ்சு விலை சமீப நாட்களாக ஒரு கண்டி ரூ.81 ஆயிரம் வரை உயர்ந்துள் ளது. எனவே பிப்ரவரி மாதம் நூல் விலை உயர்வு இருக்கும் என்று தொழில் துறையினர் அச்சத்துடன் எதிர்பார்த்து இருந்தனர். ஆனால் அவர்கள் எதிர்பார்த்த படி பிப்ரவரி 1ஆம் தேதி நூல் விலை உயர்வு அறிவிக்கப்பட வில்லை. அதேசமயம் அன்றைய தினம் ஒன்றிய அரசின் நிதி நிலை அறிக்கை வெளியிடப்பட்டதால், ஜவுளித் தொழிலைக் காப்பாற்ற பருத்தி நூல் விலை உயர்வுப் பிரச் சனையில் இறக்குமதி வரி 11 சதவிகிதத்தை நீக்குவது, விலைக் கட்டுப்பாடு உள்ளிட்ட ஏதேனும் அறிவிப்பு வெளியிடப்படலாம் என்றும் தொழில் துறையினர் எதிர்பார்த்தனர். ஆனால் அவர் கள் எதிர்பார்த்த எந்த அறிவிப்பை யும் ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் வெளியிடாதது தொழில் துறையினருக்கு பெருத்த ஏமாற்றத்தை ஏற்படுத்தி யது. அந்த ஏமாற்றம் நீடித்த நிலை யில், அடுத்த இடியாக பிப்ரவரி 2ஆம் தேதியே பின்னலாடை உற் பத்திக்கு பயன்படும் பருத்தி நூல் விலை கிலோவுக்கு ரூ.10 அதிகரிக் கப்பட்டு உள்ளது. முதல் நாள் நூல் விலை ஏற்றப்படாததால் இந்த மாதம் பழைய விலையே நீடிக்கும் என்று நிம்மதி அடைந்த பின்ன லாடை உற்பத்தியாளர்கள் இந்த விலை உயர்வால் அதிர்ச்சியும், ஏமாற்றமும் அடைந்தனர். தொழிலையே நடத்த முடி யாது என்று தத்தளிக்கும் நிலையி லும், ஒன்றிய அரசு இதில் தலை யிட்டு விலை உயர்வைக் கட்டுப்ப டுத்த நடவடிக்கை எடுக்க வில்லை. அந்த அரசு கிஞ்சித்தும் இரக்கம் இல்லாமல், இறுமாப்பு டன் செயல்படுகிறது என்று பின்ன லாடை துறையினர் தங்கள் கையறு நிலையையும், மனக்கு முறலையும் கொட்டித் தீர்த்தனர்.