districts

img

2 ஆம் நிலை சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத்தேர்வு

நாமக்கல், டிச.9- இரண்டாம் நிலை காவலர் சிறைத் துறை காவலர் தீயணைப்புத் துறை யினர் ,சீருடை பணியாளர்களுக்கான எழுத்துத்  தேர்வு மையத்தை சேலம் சரக  டிஐஜி ராஜேஸ்வரி ஆய்வு செய்தார். தமிழகம் முழுவதும் 3359 காலி பணி யிடங்களுக்கான சீருடை பணியா ளர்களுக்கான தேர்வு 35 தேர்வு மையங் களில் ஞாயிறன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்வில் 2 லட்சத்து 81 ஆயிரம் பேர் கலந்துகொண்டு தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். இதன் ஒரு பகு தியாக நாமக்கல் மாவட்டம், திருங் செங்கோடு விவேகானந்தா கல்வி நிறு வன வளாகத்தில் இரண்டாம் நிலை காவலர்கள் ஜெயிலர்கள் மற்றும் தீய ணைப்புத் துறையினர் காலிப் பணி யிடங்களுக்கு நடைபெறும் இந்த எழுத் துத்தேர்வு நடைபெற உள்ளது. இதில் 7 ஆயிரத்து 112 ஆண்கள், ஆயிரத்து 677 பெண்கள் என 8,819 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்துள்ளனர். விவேகா னந்தா மகளிர் கல்வி நிறுவன வளாகத் தில் 15 பிளாக்குகளில் உள்ள அறைக ளில் நடக்க உள்ளது. இந்தத் தேர்வு மையத்தை சேலம் சரககாவல்துறை துணைத் தலைவர் ராஜேஸ்வரி சனி யன்று  ஆய்வு செய்தார். இந்த ஆய் வின்போது மாவட்ட கூடுதல் கண்கா ணிப்பாளர் கனகேஸ்வரி, திருச்செங் கோடு உட்கோட்ட காவல்துறை துணை  கண்காணிப்பாளர் இமயவரம்பன், திருச்செங்கோடு நகர காவல் நிலைய ஆய்வாளர் மகேந்திரன் ஊரக காவல் நிலைய ஆய்வாளர் பாரதி மோகன் உள் ளிட்ட பலரும் உடனிருந்தனர்.