districts

img

இலக்கியங்கள் எப்போதும் பாவப்பட்டவர்களின் பக்கமே நிற்கின்றன திருப்பூர் புத்தகத் திருவிழாவில் எழுத்தாளர் பவா. செல்லதுரை பேச்சு

திருப்பூர், ஏப்.20- உலகில் எழுதப்பட்ட எல்லா இலக்கியங்களும் எப்போதும் பாவப்பட்டவர்கள் பக்கமே நிற் கின்றன என்று எழுத்தாளர் பவா. செல்லதுரை கூறினார். 18ஆவது திருப்பூர் புத்தகத் திருவிழாவில் செவ்வாயன்று உரையாற்றிய பவா. செல்லதுரை கூறியதாவது: உலகில் எழுதப் பட்ட எல்லா இலக்கியங்களும், எல்லா புத்தகங்களும் மனித அனு பவத்தைத்தான் பேசுகின்றன. மனி தனின் கீழ்மை, மேன்மை, அர்ப்ப ணிப்பு, துரோகம் போன்ற பண்புக ளைத் தான் திரும்பத் திரும்பப் பேசுகின்றன. இலக்கியத்தின் அடிப்படை மூலக்கூறுகளாக மனி தர்களே இருக்கின்றனர். மனிதர்களில் பார்க்கக் கூடாத வர்கள், தொடக் கூடாதவர்கள், வீட்டுக்குள் வரக் கூடாதவர்கள், என நமது மனம் மனிதர்களைப் பிரித்துப் பார்க்கக் கற்றுக் கொள் கிறது. நமது அந்தஸ்து ஒரு இன்ச்  கூடும்போது மற்றவர்களை ஒரு மீட்டர் கீழே இறக்கிப் பார்க்க மனது  கற்றுக் கொள்கிறது.

உலக இலக்கியம் முதல் உள் ளூர் இலக்கியம் வரை எல்லா  எழுத்தாளர்களும் பாவப்பட்ட, ஒதுக்கி வைக்கப்பட்ட வேசிகள், திருடர்கள், பிக் பாக்கெட்காரர் கள், ஆட்டோரிக்‌ஷா ஓட்டுநர்கள் என பாதிக்கப்பட்டவர்கள் பக் கமே நிற்கிறார்கள். எந்த இலக்கிய மும் கல்வி தந்தைகள், மினிஸ்டர் ஓய்ட் வேட்டி கட்டிய மேல் மக்கள்  பற்றி பேசுவதில்லை. மேலே  இருப்பவர்கள், கீழே இருப்பவர் களைப் பார்க்க வேண்டும் என்று தான் இலக்கியம் சொல்கிறது. மனிதர்கள் தற்போது துயரங் களை விரும்பி உண்ணும் விலங் காக மாறிவிட்டனர். மிகப்பெரும் மகிழ்ச்சி வரும்போது, கூடவே, இந்த மகிழ்ச்சி தங்காது என்ற அச் சமும் சேர்ந்தே வருகிறது. அதை காட்டிக் கொள்ளாமல் மிக நாகரிக மாக நடிக்க ஆரம்பிக்கிறோம். நூறு சதவிகிதம் மேன்மை யான மனிதன் இல்லவே இல்லை.  ஒரு இடத்தில் மேன்மை அதிகரிக் கும், மற்றொரு இடத்தில் கீழ்மை  வரும். இந்த மேல், கீழ் பண்பு களை மேடு, பள்ளங்களை இட்டு  நிரப்புவதுதான் மனித வாழ்க்கை.    

 எல்லா நடைமுறை அனுபவங்க ளையும் கற்ற பிள்ளைதான் இந்த சமுதாயத்தில் உயர்ந்து வர முடி யும். இப்போது பள்ளி, வகுப்பறை களில் பேசிய விசயங்களைப் பறி கொடுத்து விட்டு, எதையோ பணம்  கொடுத்துத் தேடிக் கொண்டிருக்கி றோம். இந்த உலகில் உடுத்தும் நாகரிக ஆடை நடத்தையில் எது வும் இல்லை. இலக்கியம் படித்த மனிதன், புத்தகம் ஏந்திய கை ஒரு  போதும் குற்றம் செய்ய சம்மதிக் காது. குரலற்றவர்களின் குரலாக, ஏழை எளியவர்களின் குரலாக, பாவப்பட்டவர்களின் பக்கமே இலக்கியம் எப்போதும் நிற்கும்.  இவ்வாறு பவா,செல்லதுரை பேசி னார்.

பரிசளிப்பு விழா

இந்த நிகழ்வில் கிட்ஸ் கிளப் கல்வி நிறுவனங்களின் தாளாளர் மோகன் கே.கார்த்திக் தலைமை வகித்தார். எஸ்.பவித்ராதேவி வர வேற்றார். சுப்ரீம் மொபைல்ஸ் எஸ்.ஏ.ராதாகிருஷ்ணன், மாவட்ட தேர்தல் பிரிவு வட்டாட்சியர் ச. முருகதாஸ், யுனிவர்சல் பள்ளி ஆர்.வினோதரணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். திருப்பூர் மாநகர காவல் துணை ஆணையர் முனைவர் பி.ரவி பங்கேற்று, கலை, இலக் கிய திறனாய்வுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவி யருக்கு பரிசுகள் வழங்கிப் பாராட் டினார்.  இந்நிகழ்வில் ஏராளமான குழந்தைகள், பெற்றோர் உள் ளிட்ட பொது மக்கள் கலந்து கொண்டனர். நிறைவாக பொன்.பாலகுமாரன் நன்றி கூறினார்.