நாமக்கல், அக்.6- திருச்செங்கோட்டிலுள்ள தனியார் கல்லூரியில் உலக சாதனை முயற்சியின் ஒருபகுதியாக ஆயிரம் பேர் பங் கேற்ற ரத்ததான முகாம் நடைபெற்றது. நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோடு கே.எஸ்.ஆர் கல்வி நிறுவனங்கள் சார்பில் ஒரே நாளில் அதிகப்படியான நபர்கள் ஒரே இடத்தில் ரத்ததானம் வழங்கும் நிகழ்வை, நோபல் வேர்ல்டு ரெக்கார்டு நிறுவனத்துடன் இணைந்து நடை பெற்றது. கே.எஸ் ஆர் கல்வி நிறுவன வளாகத்தில் நடை பெற்ற நிகழ்விற்கு, கல்வி நிறுவனங்களின் தாளாளர் சீனிவா சன் தலைமை ஏற்றார். சிறப்பு அழைப்பாளராக நாமக்கல் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.கே.பி.சின்ராஜ், நோபல் உலக சாதனை நிர்வாக அதிகாரி அரவிந்த் உள்ளிட்டோர் பங்கேற்ற னர். முன்னதாக, ரத்ததான முகாமில் ஆயிரம் பேர் பங்கேற்று ரத்ததானம் செய்தனர். ஏற்கனவே 2021 ஆம் ஆண்டு திண்டுக் கல்லில் 823 பேர் ஒரே இடத்தில் ஒரே நேரத்தில் ரத்த தானம் செய்தது உலக சாதனையாக பதிவாகியுள்ள நிலையில், அதனை முறியடிக்கும் வகையில் கேஎஸ்ஆர் கல்வி நிறுவ னத்தில் ஆயிரம் பேர் ஒரே நேரத்தில் ஒரே இடத்தில் ரத்த தானம் செய்யும் நிகழ்வு நடந்துள்ளது.